மனோகரனின் டிராட்ஸ்கிய வாதம்-ம.ஜ.இ.க
மனோகரனின் டிராட்ஸ்கிய வாதம்-ம.ஜ.இ.க

மனோகரனின் டிராட்ஸ்கிய வாதம்-ம.ஜ.இ.க

தோழர்களே இந்த பதிவு தேவையற்ற விவாதத்தையும் மன சோர்வையும் உண்டாக்கும் என்பத்ற்க்காக எழுதாமல் இருந்தேன். இரு நாட்களுக்கு முன் தோழர் Tha SivaKumar விமர்சனத்தை வாசிக்கும் பொழுது மனோகரன் பற்றிய அவரின் எழுத்து என்னை எழுத தூண்டியது ஆகவே இந்தப் பதிவு. இவை மனோகரன் தலைமை தாங்கி இருந்த அமைப்பு தூக்கி போட்டு அவரின் உண்மை முகத்தை உலகிற்க்கு காட்டியுள்ளது அதிலிருந்து கீழே…. இதில் உள்ள கருத்துகள் அனைத்தும் அந்த அமைப்பு கருத்துகளே.

ஏ.எம்.கே மறைவிற்குப் பிறகு, நான்காம் அகிலத்தில் சோசலிச சமத்துவக் கட்சி எனப்படும் டிராட்ஸ்கிய கும்பலைச் சேர்ந்த பொன்னையா வீரபாகு, ஜரதுஷ்டிரா, டிராட்ஸ்கி ஓஷோ மற்றும் இவர்களுடன் உறவாடும் காலன்துரை, ஏலகிரி இராமன், அனுப்பூர் செல்வராஜ் போன்ற டிராட்ஸ்கியர்களின் கருத்துகள் மனோகரன் மூலம் அமைப்பிற்குள் ஊடுருவ முயற்சி எடுத்தது. மனோகரன் ‘டிராட்ஸ்கி பற்றிய ஆய்வு’ எனும் பெயரிலும், ‘ஸ்டாலின் மீதான விமர்சனம்’ எனும் பெயரிலும், அப்பட்டமாக டிராட்ஸ்கி ஆதரவு – ஸ்டாலின் எதிர்ப்புக் கருத்துகளை சதித்தனமாக பிரச்சாரம் செய்து கோஷ்டி கட்டி, பிறகு தனி அமைப்பு கட்டி அமைப்பை பிளவுபடுத்தினார். மனோகரனையும் அவரது ஆதரவாளர்களையும் அமைப்பு களையெடுத்தது. தற்போது ‘பாட்டாளி வர்க்க சமரன் அணி’ எனும் பெயரில் டிராட்ஸ்கிய அணியாக செயல்பட்டு வருகிறது.

மனோகரன் டிராட்ஸ்கியர்கள் பேசும் கருத்துகளையே அமைப்புக்குள்ளும் பேசினார். மனோகரன் தனது அறிக்கையில் டிராட்ஸ்கிய ஆதரவு, ஸ்டாலின் எதிர்ப்பு கருத்துகளை நயவஞ்சகமாக ‘ஆய்வு’ எனும் பெயரில் புதிய இடது பாணியில் முன்வைத்துள்ளார். அறிக்கை மீதான வாதத்தில் அப்பட்டமாக நான்காம் அகிலத்தின் கருத்துகளை முன்வைத்தார். ஆனால் மாவோ வழியில் ஸ்டாலினை விமர்சிப்பதாகக் கூறி மாவோவை இழிவுபடுத்தி தாக்கினார். வாதத்தில் அவர் முன்வைத்த மார்க்சிய விரோதக் கருத்துகள் பின்வருமாறு:

1. ஸ்டாலின் இந்தியப் புரட்சியின் எதிரி; சீனப் புரட்சிக்குத் தடையாக இருந்தார்; அவர் உலகப் புரட்சியின் எதிரி.

2. ஸ்டாலின் அகிலம் கலைத்தது தவறு; அவர் கலைப்புவாதி; அகிலம் கலைத்ததால்தான் கம்யூனிச அமைப்புகள் பிளவுண்டன; அகிலம் கலைத்ததற்கு ஸ்டாலின் சொன்ன காரணங்கள் சிறுபிள்ளைத்தனமானவை.

3. ஸ்டாலினின் பாசிச எதிர்ப்பு செயல்தந்திரம் தவறு; அதில் இடது வலது விலகல் போக்குகள் ஏற்பட்டன.

4. சோசலிசக் கட்டுமானத்தில் ஸ்டாலின் செய்த கடுமையான மார்க்சிய விரோத தவறுகளே ருஷ்யாவில் முதலாளித்துவ மீட்சி ஏற்பட்டதற்கு காரணம். கலைப்புவாதத்தை எதிர்த்தப் போராட்டம் என்பது கூட முதலாளித்துவ மீட்சி பற்றிய இந்த ஆய்விலிருந்தே துவங்க வேண்டும். ஸ்டாலின்தான் கலைப்புவாதத்தின் தொடக்கம். அவர் சர்வாதிகாரி; பலரைக் கொன்ற கொலைகாரன்.

5. ஸ்டாலின் வெறும் துப்பாக்கி; தத்துவவாதி இல்லை.

6. காந்தி கூட ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலை எடுத்தார். ஸ்டாலின் வழிகாட்டுதலால் தான் இந்திய பொதுவுடைமை இயக்கம் ஏகாதிபத்திய ஆதரவு நிலையெடுத்தது.

7. மாவோ அகிலம் கலைத்ததை ஆதரித்தார்; அகிலம் கட்ட முயற்சிக்கவில்லை; அவர் சர்வதேச பாத்திரம் ஆற்றவில்லை.

8. மாவோ-லின்பியோ கூட்டணியே இந்தியாவில் நக்சல்பாரி இயக்கம் அழிந்து போனதற்கு காரணம்.

9. மாவோவின் கலாச்சாரப் புரட்சி தோல்வி அடைந்தது. கலாச்சாரப் புரட்சி முதலாளித்துவ மீட்சியைத் தடுக்க முடியவில்லை. சீனாவில் முதலாளித்துவ மீட்சி ஏற்பட மாவோதான் காரணம்.

10. ஸ்டாலின்-மாவோவை விமர்சிக்காமல் கட்சி கட்ட முடியாது. ஸ்டாலின் வழியில் சென்று அழியப் போகிறோமா? ஸ்டாலினை மறுத்து கட்சி கட்டப் போகிறோமா? இதுவே நம்முனுள்ள கேள்வி.

11. லெனின் சொன்னவாறு ஏன் ஐரோப்பா முழுதும் புரட்சி நடக்கவில்லை? தனிநாட்டில் புரட்சி சாத்தியமில்லை என்று டிராட்ஸ்கி முன்பே சொன்னார்.

12. டிராட்ஸ்கியின் ‘நிரந்தரப் புரட்சி’ பரிசீலனைக் குரியது. அவர் மா-லெ வாதி. புரட்சியில் பங்கு பெற்றார். டிராட்ஸ்கி ஸ்டாலினின் எதேச்சதிகாரத்தால்தான் கோஷ்டிவாதியாகவும் எதிர்ப்புரட்சியாளனாகவும் மாறினான். (இது மாவோவின் விமர்சனம் என்கிறார். ஸ்டாலினை எதேச்சதிகாரி என்றும் ஸ்டாலினால்தான் டிராட்ஸ்கி எதிர்புரட்சியாளனாக மாறியதாக மாவோ கூறினாரா?) லெனின் டிராட்ஸ்கியைத்தான் வாரிசாக பார்த்தார். ஸ்டாலினை எதிர்த்தார். லெனின் உயிலை இவ்வமைப்பு ஏற்கிறதா? இல்லையா? என்று கேட்டார்.

13. ஸ்டாலின்-மாவோவை மறுபரிசீலனை செய்ய இந்த அமைப்பு அனுமதித்தால்தான் இந்த அமைப்பில் இருப்பேன்.

14. மார்க்சிய-லெனினியத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் மீதான விமர்சனம் எனும் பெயரில் டிராட்ஸ்கியவாதிகளின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் மீது மனோகரன் கடும் தாக்குதல் தொடுத்தார். டிராட்ஸ்கியை எதிர்ப்பது என்பதே மாவோ சிந்தனையைக் கைவிடுவது என்றும், அது தொண்டு நிறுவன அரசியல் என்றும், கலைப்புவாதம் என்றும் பேசுகிறார்.

மனோகரன் பாசிச காலகட்டத்தில் புதிய ஜனநாயகப் புரட்சி பேசுவது டிராட்ஸ்கியம் என்கிறார். ஆனால் இது புதிய ஜனநாயகப் புரட்சியை கைவிட்டு ஓடுவதும், அப்பட்டமான முதலாளித்துவ தேசியவாதமும் ஆகும் .

ஞானம் கும்பலைப் போலவே, மனோகரன் கும்பலும் ஏ.எம்.கே மீது தாக்குதல் நடத்தியது. டிராட்ஸ்கியத்தை ஞானம் கும்பல் துவக்கி வைக்க, மனோகரன் கும்பல் முடித்து வைத்தது. ஏ.எம்.கே. மீதும் அவர் நிலைபாட்டின் மீதும் மனோகரன் நடத்திய தாக்குதல் வருமாறு:

1. ஏ.எம்.கே தத்துவ அறிவு இல்லாதவர்; அவர் வெறும் நடைமுறையாளர்; 30 ஆண்டுகளாக செயல்தந்திர கண்ணோட்டம் இல்லாமல் இருந்தார்; ஏதும் எழுதி வைக்கவில்லை; அவர் எதேச்சதிகார வாதி; குறுங்குழுவாதி; அவர் நிரூபிக்கப்பட்ட தலைவர் இல்லை;

2. ஏ.எம்.கே-வின் காங்கிரசும் பாஜகவும் இந்தியப் பாசிசத்தின் இரு முகங்கள் என்ற கோட்பாடு பொருந்தாது; காங்கிரஸ்-திமுக அணிக்கு நிபந்தனைகளுடன் வாக்களிக்க மக்களைக் கோரலாம்; புதிய ஜனநாயகப் புரட்சியை கைவிடவேண்டும்; பாசிச எதிர்ப்பு அரசாங்கம் அமைப்பதும், அதில் காங்கிரசை அமர்த்துவதும் அவசியம்; பாஜக மட்டுமே பாசிசக் கட்சி;

3. நிரந்தரமாக பாராளுமன்றத்தில் பங்கேற்க வேண்டும்; தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்த வேண்டும்; தலைமறைவு அமைப்பு தேவையில்லை; ஏகாதிபத்தியங்களுக்கிடையில் பனிப்போர் இல்லை; ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தும் ஏகாதிபத்தியத்தைத்தான் முதன்மையாக எதிர்க்க வேண்டும். தாய்நாட்டை காப்பது என்ற பெயரில் அமைதி வழியில் நிதி மூலதன ஆதிக்கத்தில் ஈடுபடும் ஏகாதிபத்தியத்தை ஆதரித்தார்; வெனிசுலா பிரச்சினையில் அமெரிக்காவை எதிர்த்து சீன-ரஷ்ய முகாமை ஆதரிக்க வேண்டும் என்றார்;  

4. காஷ்மீரை ஆக்கிரமிப்பதால் டெல்லிக்கு ஏகாதிபத்திய குணாம்சம் உண்டு. இந்தியா துணை ஏகாதிபத்தியம்; பிரபாகரன் பாசிஸ்ட்;

5. ஆறு மாத கால போராட்டத்திற்குப் பிறகும் சுயவிமர்சனம் வர மறுத்து டிராட்ஸ்கிய கருத்துகளைக் கொண்டு தனி அமைப்பு கட்டி பிளவுபடுத்தினார். எனவே, அவரையும் அவரது ஆதரவாளர்களையும் அமைப்பு பெரும்பான்மை முடிவின் அடிப்படையில் களையெடுத்தது. தற்போது தனது அமைப்புக்கு பாட்டாளி வர்க்க சமரன் அணி என பெயரிட்டுள்ளார். பாட்டாளி வர்க்க சமரன் பெயரில் பத்திரிகையையும் சமரன் வெளியீட்டகத்தையும் தன் பெயருக்கு அமைப்பிற்குத் தெரியாமல் கள்ளத்தனமாக பதிவுசெய்துகொண்டார். சமரன் நிலைபாட்டை விட்டு ஓடிவிட்டு, சமரனை தாக்கிவிட்டு ஞானம் கும்பலைப் போலவே மனோகரனும் சமரன் பெயரை வைத்து ஈனத்தனமாக பிழைப்பு நடத்துகிறார்.

இவ்வாறு, ஏ.எம்.கே மீதும் அவரது நிலைபாடுகள் மீதும் தாக்குதல் நடத்தினார். எய்ம் எதிர்ப்பு போராளி என்று தன்னையே பெருமையாகக் கூறியவர், இறுதியில் ஏகாதிபத்தியம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பற்றிய எய்ம் நிலைபாட்டையே அவரும் முன்வைத்தார்.

தொகுத்துச் சொல்வதெனில்,

ஏகாதிபத்தியம் பற்றிய லெனினிய கோட்பாடுகளைக் கைவிட்டு காவுத்ஸ்கிய-டிராட்ஸ்கிய வாதத்தை முன்வைப்பது; ஆனால் டிராட்ஸ்கிய எதிர்ப்பு வேடம் போடுவது;

தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்தலாம் என்பது;

கார்ப்பரேட் காவி பாசிசம் என பேசுவது;

ஜனநாயக மத்தியத்துவத்தை, இருவழிப் போராட்டத்தை மறுப்பது;

கோஷ்டி கட்டுவதை நியாயப்படுத்துவது;

பாராளுமன்றவாதத்தை முன்வைப்பது, தலைமறைவு அமைப்பை துறந்து ஓடுவது;

அமைப்பை முதலாளிய நிறுவனமாக, திருத்தல்வாத அமைப்பாக மாற்ற முயற்சிப்பது;

தாங்களே கலைப்புவாதிகளாக மாறிவிடுவதால், மா-லெ அமைப்பின் பிளவுகளுக்குக் காரணம் கலைப்புவாதம் என்ற சமரன் நிலைபாட்டை மறுத்து சமரனையே (ஏ.எம்.கே.) கலைப்பு வாதியாக, குறுங்குழுவாதியாக மாற்றி விடுவது;

சமரன் மீது தாக்குதல் தொடுப்பது; சமரன் நிலைபாட்டை கைவிட்டு ஓடுவது; ஆனால் சமரன் பெயரில் பிழைப்பு நடத்துவது;

என எல்லாவற்றிலும் ஞானம் கும்பலும் – மனோகரன் கும்பலும் ஒரே நிலைபாட்டில் பிண்ணிப் பிணைந்துள்ளது. திருத்தல்வாதமும் பிழைப்புவாதமும் இரண்டையும் ஒரு புள்ளியில் இணைக்கிறது.

ஆதாரம் :-https://samaranamk.blogspot.com/2019/10/blog-post.html?m=0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *