பிரித்தறிவோம்
——————–
*தத்துவதளத்தில் நாம் மா-லெ-மாவோசிந்தனையை உயர்த்திப்
பிடிக்கிறோம்.
திரிபுவாதிகள் மாவோ சிந்தனையை
ஏற்றுக்கொள்வதில்லை.
*நாம் இந்தியாவை புதிய காலனியாக
மாறியுள்ளது என்கிறோம்.
திரிபுவாதிகள் இந்தியா காலனியாதிக்கத்திலிருந்து
விடுதலை பெற்று விட்டது என்கின்
றனர்.
*1947யை நாம் அதிகாரமாற்றம்
என்கிறோம்.
திரிபுவாதிகள் சுதந்திரம் என்கின்றனர்
*நாம் அனைத்து போராட்ட வடிவங்
களையும் ஆதரிக்கிறோம்.
திரிபுவாதிகள் பாராளுமன்ற போராட்
டத்தைமட்டும் நம்புகின்றனர்.
*நாம்தேசிய இனங்களுக்கு பிரிந்து
செல்லும் உரிமையை அங்கிகரிக்
கிறோம்.
திரிபுவாதிகள் வலுக்கட்டாய ஒருமை
பாட்டைபேசுகின்றனர்.
*நாம் இந்திய முதலாளிவர்க்கத்தை
தரகுமுதலாளி-தேசியமுதலாளி
என பிரித்து பார்க்கிறோம்
திரிபு வாதிகளுக்கு இந்த பார்வை
இல்லை.
*நாம் தெலுங்கானாவையும் நக்சல்
பாரியையும் வழிகாட்டியாக
கொண்டுள்ளோம்.
திரிபுவாதிகள் வங்கத்தையும்
கேரளாவையும் வழிகாட்டியாக
கொண்டுள்ளனர்.
*நாம் தொழிலாளர்களுக்கு அரசியல்
உணர்வை ஊட்டவேண்டும் என்
கிறோம்.
திரிபுவாதிகள் இதை செய்வதே
இல்லை.
*நாம் சமுக மாற்றம் அமைதிவழியில்
நடைபெறாது என்கிறோம்
திரிபுவாதிகள் அமைதிவழியில்
முடியும்என்கின்றனர்.
*நாம் ஏகாதிபத்தியத்தின் இந்திய
தாசர்களான பிஜேபி-காங்கிரஸ்
கும்பலையும் தமிழக ஆளும்
கும்பலான அதிமுக-திமுக
கும்பலை இலக்காக கொண்டுள்
ளோம்.
திரிபுவாதிகள் தேர்தல் சமயங்களில்
இவர்களோடு கூட்டணி காண்கின்
றனர்.
*ஆனாலும் என்ன……
நாம்குருங்குழு வாதத்தில் மூழ்கி
கிடக்க திரிபுவாதிகள் சந்தர்ப்ப
வாதத்தில்மூழ்கி கிடக்கிறார்கள்.
*நாம்கம்யூனிஸ்ட் அகிலத்தின்
நிலைபாடுகளை உயர்த்தி பிடிக்
கிறோம்
அவர்கள் சோசலிசத்துக்கான
பிரிட்டிஷ்பாதையை தூக்கிப்பிடிக்
கின்றனர்.
குருங்குழுவாதம் மற்றும் சந்தர்ப்ப
வாதத்தை முறியடித்து புரட்சிகர
போக்கை உறுதிபடுத்துவதே
புரட்சியாளர்களின் கடமை.