லிபிய நாட்டின் விடுதலைப்போராளி உமர்முக்தார் தன்வாழ்நாள் முழுவதும் இத்தாலிய ஏகாதிபத்திய அரசியலைஎதிர்த்து வீரச்சமர் புரிந்தவன்! அவன் ஒரு கையில் குரான்! மறுகையில் துப்பாக்கி! ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி அவன்! தேசபக்தன்! அவன் கம்யூனிஸ்ட் அல்ல!
பாரதியும், பராசக்தியும் பாட்டும் அவன் ஆயுதங்கள்!
“பொழுதெலாம்
எங்கள் செல்வம்
கொள்ளை கொண்டு
போகவோ
நாங்கள் சாகவோ”
என கவிதை கொளுத்தியவன்.பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போர்ப்பரணி
பாடியவன். தேசபக்தன். அவன் கம்யூனிஸ்ட் அல்ல!
இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்று பொருள்முதல்வாதம்
எனும் எரிதழல்ஆயுதத்தை ஏந்தியவன் மட்டுமே தான் கம்யூனிஸ்ட்.
உலக பாட்டாளிவர்க்கத்திற்கு வழிகாட்டும் தத்துவம் மார்க்சிய தத்துவமான இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்று பொருள்முதல்வாதம் மட்டுமே.
உழைக்கிற மக்களின் தத்துவம் மார்க்சியம் இருக்கையில்
அதை விடுத்து மண்ணுக்கேற்ற மார்க்சியம் கும்பலை பற்றி என்ன சொல்ல, இவை மார்க்சிய தத்துவத்தை கொச்சை படுத்துவதை விட வேறு என்ன இருக்கிறது. மார்க்சியர்களின் அளப்பரிய தியாகத்தால் விளைந்தது இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்று பொருள்முதல்வாதம்.
பாரதி வெள்ளைக்காரர்களுக்கு பயந்து வெள்ளைக்காரர்களுக்கு எதிராக கட்டுரை எழுதவில்லை. வாதத்திற்காக ஏற்றுக்கொள்வோம் வெள்ளையர்களுக்கு ஆதரவாக இருந்தாரா? ஆனால் பெரியாரியவாதிகள் எங்கேயும் பெரியார் பிரிட்டீசாரை எதிர்த்தார் என்று வாதிடுவதில்லை. காரணம் பெரியார் காங்கிரசு கட்சியில் செயல்படும்போது மட்டும்தான் பிரிட்டீசாரை எதிர்த்த போராட்டங்களில் கலந்துகொண்டார். அதைவிட்டு வெளியில் வந்து தொடர்ந்து காங்கிரசு எதிர்ப்பு போராட்டமே நடத்தினார். காங்கிரசு கட்சி பெயரளவிலாவது பிரிட்டீசாரை எதிர்த்தபோது பெரியார் அதற்கு எதிராக பிரிட்டீசாரை வெளிப்படையாக ஆதரித்து பார்ப்பனர்களை எதி்ர்த்துப் போராடினார். இப்போதும் அவர்களது வாரிசுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்காமல் பார்ப்பனிய எதிர்ப்பு வேசம்கட்டி ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களை திசைதிருப்புகிறார்கள் என்பதே எங்களது விமர்சனம் ஆகும். இந்த விமர்சனத்திற்கு பதில் அளிக்காமல் பெரியார் அதைச்செய்தார் இதைச்செய்தார் என்று கதையளந்து கொண்டிருக்கிறார்கள். இப்போதும் கார்பரேட்டு முதலாளிகள் உயர்கல்வியை வணிகமயமாக்கி கார்பரேட்டு முதலாளிகள் குறிப்பாக அமெரிக்க முதலாளிகள் கொள்ளையடிப்பதற்காக நீட் தேர்வு கொண்டுவரப்படுகிறது என்பதைப்பற்றி பேசாமல் பார்பனிய சூழ்ச்சி என்றும் பார்ப்பனர்களே இதில் ஆதாயம் பெற்றார்கள் என்று சொல்லி இதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடையும் WTO வின் தலையீட்டையும் மறைக்கிறார்கள்.
வரலாற்று நிகழ்வுகளை நமது அனுபவமாக எடுத்துக்கொள்ளத்தான் இந்த வாதம். இதில் வெள்ளைக்காரன் வரவில்லை என்றால் என்ற கற்பனை எதற்கு? பெரியார் மற்றும் பாரதி பற்றிய தனிமனிதர் பிரச்சனை அல்ல இங்கு விவாதப் பொருள். கருத்துமுதல்வாத சிந்தனை உள்ள ஒருவர் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டால் அவருடன் அணிசேரலாமா? அல்லது சுதந்திற்கு எதிராக செயல்படும் ஒருவர் பகுத்தறிவுவாதியாக இருந்தால் அவரோடு நாம் அணிசேரலாமா? என்பதே இங்கே வாதமாகும். கருத்துமுதல்வாதத்தை எதிர்ப்பதே முதன்மை என்பது தோழர் ஈஸ்வரன் அவர்களின் வாதமாக உள்ளதாக நான் கருதுகிறேன். நாங்கள் முதன்மையாகப் பார்ப்பது ஏகாதிபத்திய எதிர்ப்பே முதன்மையானதாகும். இதற்கு தியாகம் செய்ய தயாராக வேண்டும். அது எல்லோராலும் முடியாது.
காலனியம் ஆதிக்கை கொடுமைகளை பற்றி
கிருத்துவ காலனியம் என்று மார்க்சால் வரையறுக்கப்பட்ட கிருத்துவ பாதிரியார்கள் அடிமை வியாபாரம் செய்து காலனிய நாடுகளிலுள் விவசாயிகளை அடிமைகளாக்கி விற்று படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பலகோடி இருக்கும். அந்த கிருத்துவ கொடுங்கோலர்கள் செய்த அநியாயத்தோடு இந்துத்துவ நிலபிரபுத்து சக்திகள் செய்த கொடுமை மிகவும் குறைவானதே. இந்துத்துவ கொடுமையை பேசும்போது கிருத்துவ கொடுமையையும் இணைத்தே பேசவேண்டும். முன்னது நிலபிரபுத்துவ கொடுமை பின்னது காலனிய முதலாளிகளின் கொடுமை. இந்த இரண்டு கொடுமைகளும் இன்றும் தொடர்கிறது. அதனை ஒழிக்க வழி என்ன? காலனியாதிக்கத்திற்கு முடிவு கட்டுவது. உள்நாட்டில் ஜனநாயத்திற்கான போராட்டத்தில் வெற்றிபெறுவதே அந்த வழியாகும்.
இன்றைய ஏகாதிபத்திய கட்டத்தில் பாட்டாளிவர்க்க புரட்சி கட்டத்தில் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக இரண்டு முனைகளில் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு முனையானது அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளிலுள்ள பாட்டாளி வர்க்கமானது அதன் ஏகபோக முதலாளிகளுக்கு எதிராக சோசலிசத்திற்காக நடத்தும் போராட்டம் இன்னொரு முனையானது காலனி நாடுகளில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடத்தப்படும் விடுதலைப் போராட்டம். இந்த இருமுனைகளில் நடத்தப்படும் போராட்டமே ஏகாதிபத்தியத்தை வீழ்த்தி உலக மக்களை விடுவிக்கும். இதற்கான முழக்கமே ஒடுக்கப்பட்ட மக்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம் என்பதாகும்.
பாரதி காலனிய எதிர்பாளன் என்பதை சுட்டிகாட்ட ஏகாதிபத்தியம் பற்றி எழுதியுள்ளென்.
பாரதியைத் திரித்து கூறவும், திரையிட்டு மூடவும், அவன் மீது புழுதியை வாரித் தூற்றவும் பல முயற்ச்சிகள் நடந்தே வந்துள்ளன, பாரதி பார்ப்பனக் குலத்தில் பிறந்தான் என்பதாலும், ‘ஆரிய் நாடெங்கள் நாடே’ என்றெல்லாம் பாரத பூமியை அவன் பாடியிருந்த காரணத்தாலும், அவனைப் பார்ப்பனீயக் கவி என்று சித்திரிக்கவும் பழிதூற்றவும் திராவிட இயக்கத்தினர் தொடர்கின்றனர்.
ராஜாஜி போன்றவர்களோ பாரதியை ஒரு சமுதாயக் கவி என்ற உண்மையை மறைத்தும் மறுத்தும் அவனை வேதாந்தக் கவியாகச் சித்திரிக்கவும் முயன்றார்கள்.
பாரதியின் சமுதாய லட்சியங்களையும் கனவுகளையும் ஜீரணிக்க முடியாதவர்கள் முகம் சுழித்தார்கள், குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற பாடல்களைப் பாடியதால் பாரதி நிலைத்திருக்கிறானே தவிர, ‘நிலையற்ற ’தேசிய் கீதங்களைப் பாடியதால் அல்ல என்று விமர்சனம் வைத்தனர்.
இப்படி பல எதிர்புகளுக்கிடையே பாரதியை அன்றைய ஆங்கில அரசு எழுத்து சுதந்திரம் பேச்சு சுதந்திரம் ஆகியவற்றை தடை செய்திருந்த போதும் தடைகளை மீறி பாரதியின் எழுதுத்துக்கள் இன்று ஆச்சரியமான ஒன்றல்லவோ?
பாரதி வாழ்ந்த காலம் 39 ஆண்டுகள் அதில் அவன் 1905 லிருந்து 1921 ஆம் ஆண்டு வரை பதினாறு ஆண்டுகள் அவன் எழுதி சென்றவைதான், இன்றும் அவன் சிலரின் அரசியல் பணிக்கு நெருடலாக உள்ளான்.
இதனை விளக்கி கொள்ள சோவியத் நாட்டு புரட்சிக் கவிஞனான மயாகோவ்ஸ்கி ஒருமுறை தனது கவிதை பற்றிய விமர்சனம் செய்த ஒருவர், உங்கள் கவி பொருள் நிகழ்காலத்தின் தற்காலிக பிரச்சினை பற்றியது இவை பேரிலக்கியங்களைப் போல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் கவிதை நிலைத்து நிற்குமா? என்று கேள்வி எழுப்பினான், அதற்கு மயாகோவஸ்கி, ” முடிந்தால் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்து இந்த கேள்வியை கேள், அப்பொழுது பதிலளிக்க நான் இருப்பேன், ஆனால் கேள்வி கேட்க நீதான் இருக்க மாட்டாய்!” என்றான்..பாரதியின் வாழ்க்கை போராட்டத்தில் ஆம் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் இருந்தது அவனின் வாழ்க்கை விமர்சனம் செய்பவர்கள் அறிந்து கொள்ள மார்க்சிய அடிப்படையில் அணுகவும்,ஒவ்வொரு கலை வடிவமும் சமூகத்தின் ஏதோவொரு பிரிவோடு உறவு கொண்டுள்ளது. இது அதன் உள்ளடக்கத்தாலே நிர்ணயிக்கப்படும். இந்த உள்ளடக்கம் கலைஞன் பிரதிநிதித்துவப்படுத்தும் வர்க்கத்தின் கருத்துகளாகவோ அல்லது அவன் மீது செல்வாக்குக் கொண்டுள்ள பல்வேறு சமூகப் பிரிவுகளின் கருத்துகளாகவோ அமையும். எனவே ஒரு படைப்பாளியையோ அவன் படைப்புகளையோ விமர்சிக்கும் போது, அவன் படைப்பின் உள்ளடக்கம், அதன் சாராம்சம், சமூகப் பிரிவுகளுடன் கலைஞனின் தொடர்பு, சமூக வாழ்வின் மீது படைப்பு வகிக்கும் செல்வாக்கு, அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றை அப்படைப்புகள் எழுந்த காலத்தை ஒட்டி ஆராய வேண்டும். ஏனெனில் கலைஞனின் படைப்புகள், அவன் வாழ்ந்த காலத்தின் பிரதிபலிப்பு.எனவே ஒரு படைப்பை ஆயும்போது, அது தோன்றிய காலம் பற்றியும், அக்காலத்தில் முரண்படும் சமுதாய சக்திகள் பற்றியும், அதன் பல்வேறு விதமான உட்பிரிவுகள் பற்றியும், அவற்றுக்குள்ளே படைப்பாளி எதன் சார்பாக நின்று படைக்கிறான் என்பது பற்றியும் பார்க்க வேண்டும்.(தொடரு
“ | தேடிச் சோறு நிதந் தின்றுபல சின்னஞ் சிறு கதைகள் பேசிமனம் வாடித் துன்பமிக உழன்றுபிறர் வாடப் பல செயல்கள் செய்துநரை கூடிக் கிழப்பருவம் எய்திகொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும்பல வேடிக்கை மனிதரைப் போலேநான் வீழ்வே னென்று நினைத்தாயோ? | ” |
பாஞ்சாலி சபதம்[தொகு]
இதழியல் பணியும் விடுதலைப் போராட்டமும்[தொகு]
பாரதியார், முதலில் நவம்பர் 1904 முதல் ஆகத்து1906 வரை சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905 – ஆக. 1906), இந்தியா என்ற வார இதழில் (மே 1905 – மார்.1906 / செப். 1906, புதுச்சேரி: 10.19.1908 – 17. மே 1910), சூரியோதயம் (1910), கர்மயோகி (திசம்பர் 1909–1910), தர்மம் (பிப்.1910) என்ற இதழ்களிலும் பாலபாரத யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் “இந்தியா” பத்திரிகை புதுவையில் வெளியானது.
தடை செய்யப்பட்ட புத்தகங்கள்[தொகு]
பாரதியாரின் பாடல்களை பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பர்மா மாகாண அரசு தடைசெய்தது. இதனைப் பின்பற்றி சென்னை மாகாணத்தின் காவல் துறை உத்தரவுமூலம் பாரதியார் பாடல்கள் தடைசெய்யப்பட்டு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாகாணச் சட்ட அவையில் விரிவான விவாதம் 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 8, 9 தேதிகளில் நடந்தது . தீரர் சத்திய மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விவாதத்தில் இலக்கியம் சார்ந்த பல கருத்துகள் பதிவாகின.[8]
புதுக்கவிதைப் புலவன்[தொகு]
பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவருக்கு முன்பாகக் கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை எனப் புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசனக் கவிதையைத் தமிழுக்குத் தந்தவர்.
பெண்ணுரிமைப் போராளி[தொகு]
பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே எனப் பெண்ணுரிமையை ஏத்தினார். “போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான்” என்ற பாரதி பெண்மை வாழ்கவெனக் கூத்திடுவோமடா என்றார். பெண்களின் கல்வியறிவுக்காகச் சட்டங்களைச் செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டார்.
பாரதி, தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்தார்.
சுப்ரமணிய பாரதியார்
எழுத்தாளர்கள்JUNE 4, 2013சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.பிறப்பு: டிசம்பர் 11, 1882பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்இறப்பு: செப்டம்பர் 11, 1921நாட்டுரிமை: இந்தியாபிறப்புசுப்ரமணிய பாரதியார் அவர்கள், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.இளமைப் பருவம்சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார். .பாரதியாரின் திருமண வாழ்க்கைபாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.பாரதியாரின் இலக்கிய பணி‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார், தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்குசுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.இறப்பு 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.பாரதியாரை நினைவூட்டும் சின்னங்கள்எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பாரதியை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எ’ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்’, ‘தமிழின் கவிதை’ மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர், என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது.