ட்ராட்ஸ்கியவாதிகள் குற்றச்சாட்டு கீழ் வருவன.
1).அகிலம் என்ற ஒன்று இல்லாமல் எந்த ஒரு தனி நாட்டிலும் கட்சி கட்ட முடியாது புரட்சி நடத்த முடியாது என்பர் .
2).அகிலத்தை ஸ்டாலின் கலைத்தது தவறு அவர் ஒரு கலைப்புவாதி மாவோ அகிலத்தை கட்டவில்லை அவரும் கலைப்புவாதி என்பர் .
3).ஐநாவில் சேர்ந்தமை முதலாளித்துவ ஏகாதிபத்திய கூட்டு சேர்ந்தார் இவை ஸ்டாலின் மீது வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு .
இனி பதிலாக
பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமை பற்றிய கம்யூனிஸ்டுகள் யாரும் மறுப்பதற்கில்லை இது வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வடிவங்களைக் கையாள வேண்டியிருந்திருக்கிறது.
முதலாம் அகிலமும் பாரிஸ் கம்யூனும்
முதலாம் அகிலத்தின் வாரிசாக பாரிஸ் கம்யூனும் , பாட்டாளி வர்க்க ஆட்சி அதிகாரத்தின் முன் மாதிரி வடிவமான கம்யூனும் இருந்தது .
பாரிஸ் கம்யூனுக்குப்பிறகு அகிலம் சட்டரீதியாக இயங்க முடியாமல் போனதாலும் , போலீஸ் அடக்குமுறையாலும், தலைவர்களுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரத்தினாலும் முதலாம் அகிலம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது .முதல் அகிலம் 12 ஆண்டுகள் செயல்பட்டது .(1864- 1876)
1871ல் பாரிஸ் கம்யூன் புரட்சி வெடித்தது. அவை 72 நாட்கள் மட்டுமே நீடித்தது. முதலாளித்துவ சக்திகளின் கூட்டுசதியால் ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது.
பாரிஸ் கம்யூன் தோல்வியிலிருந்து மார்க்ஸ் எங்கெல்ஸ் படிப்பினைகளை தொகுத்தளித்தனர் .அந்தத் தொகுப்பு உலகப் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு பெரும் சேவை ஆற்றுவது அதன் சுருக்கம் கீழே..
முதலாளித்துவ அரசு எந்திரத்தை தகர்த்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவது அவசியம்.
மையப்படுத்தப்பட்ட ஆட்சியின் அவசியம் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிக்குப் பின்னும் அப்படியே இருக்கிறது, முதலாளி வர்க்கத்தை அரசியல் ரீதியில் ஒடுக்குவதற்கு அது தேவைப்படுகிறது .
பொருளாதார நடவடிக்கைகளும், உற்பத்தியில் நிகழும் அராஜகத்தை அகற்றுவதற்கும், உற்பத்தியின் சமூக வடிவங்களை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் இசைவோடு ஒரு நிலைப்படுத்தவும் மாற்று கலாச்சார கட்டுமானத்துக்கும் அது அவசியம் .
மாற்றங்கள் அனைத்தும் ஒரே அடியில் நிறைவேறாது. சந்தர்ப்ப சூழ்நிலைகளும், மனிதர்களும் மாறுவதற்கு மாபெரும் சக்திகளும், வெகு காலம் தேவைப்படும் .
தொழிலாளி வர்க்க ஆட்சி வருவதால் வர்க்கப் போராட்டம் அகற்ற படுவதில்லை மாறாக வர்க்கப் போராட்டம் தனது பல்வேறு கட்டங்களின் மூலம் மிகவும் விவேகமான மனிதாபிமானமுள்ள பாதையில் நடைபெறுவதற்கான விவேகமான சூழ்நிலை உருவாக்கப்படுகிறது.