தோழர் சாரூ மஜூம்தார் இடது திருத்தல்வாதியா?-சி.பி.
தோழர் சாரூ மஜூம்தார் இடது திருத்தல்வாதியா?-சி.பி.

தோழர் சாரூ மஜூம்தார் இடது திருத்தல்வாதியா?-சி.பி.

தோழர் தா.சிவகுமார் அவ்ர்களின் சாரூ மஜூம்தார் இடது திருத்தல்வாதி என்ற முக நூல் பதிவுக்கு பதிலளிக்கும் முகமாக இந்தப் பதிவை எழுதுகிறேன்.
அன்புத் தோழர் தா சிவக்குமார் அவர்களுக்கு இந்த விவாதத்தை தொடங்கி வைத்தமைக்கு நன்றி.

இன்றைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களை தாங்களே இடதுசாரிகள் என்றும் புரட்சியாளர்கள் என்றும் அழைத்துக் கொள்வோரஒ பற்றி அறிந்துக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது அதற்க்காக.

1).https://m.facebook.com/story.php?story_fbid=3093173560777743&id=100002553890383

August 8 at 10:00 PM · 

எதிர்கால தவறுகளைத் தவிர்ப்பதற்காகக் கடந்த காலத் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

கடந்த காலத்தைத் தெரிந்துக் கொள்வதற்காக மட்டுமே நாம் கடந்த காலததைப் பற்றிய அக்கறை கொண்டிருக்கவில்லை. கடந்த காலத்தில் இருந்து கற்றுக் கொண்டு, அது தற்போதைய காலத்திற்க்கும் எதிர்காலத்திற்க்கும் சேவை செய்ய வேண்டும் என்பதையே விரும்புகிறோம்.

தனி நபர்களுடன் நாம் கடப்பாடு கொண்டிருக்கவில்லை: மாறாக இந்திய மக்களின் விடுதலை என்ற இலட்சியத்துடன் தான் நாம் கடப்பாடு கொண்டுள்ளோம். எனவே, நமது தலைவர்கள் மீது நாம் வைத்துள்ள மதிப்பு விமர்சனத்திற்க்கு அப்பாற்பட்டதல்ல.
கட்சியின் கொள்கையில் நிலவிய எதிர்மறைக் கூறுகளை ஆய்வதில் நமது உணர்வுகள் நம்மை தடுத்திட இயலாது.
அவர்களுடைய கொள்கைகள், மற்றும் நடவடிக்கைகள், அவர்களுடைய குறைப்பாடுகள் மற்றும் எல்லைகள் ஆகியவற்றை நாம் மூடி மறைக்கப் போவதில்லை. அதற்க்கு மாறாக, யாருடைய உணர்வும் புண்பட்டு விடக் கூடாது எனக் கருதாமல், அவற்றை முழுமையாக வெளிப்படுத்துவோம்.

நாம், ” எதிர்கால தவறுகளைத் தவிர்ப்பதற்காகக் கடந்த காலத் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்” நமது தலைவர்கள் பின்பற்றிய தவறான கொள்கைகளை விமர்சிப்பதன் மூலம் நாம் நமது சொந்த சுய விமர்சனம் மேற்கொள்கிறோம்.

மாவோ கூறியது போல,”கடந்த காலத்தில் மக்களுக்கு இருந்த அனுபவமின்மை காரணாமாக”இடது” விலகல் பிரச்சினை எழுந்தது . அனுபவம் இல்லையெனில் தவறுகளைத் தவிர்ப்பது கடினமாகும். அனுபவமின்மையிலிருந்து அனுபவம் பெறுவது என்ற நிகழ்ச்சி போக்கின் ஊடாகத் தான் ஒருவர் பயணிக்க வேண்டும்.

நக்சல்பரி மக்களிடையே நம்பிக்கையை விதைத்தது, நமது மக்களை ஒடுக்குமுறையிலிருந்தும் சுரண்டலிலிருந்தும் காப்பாற்றுவது பற்றிய நம்பிக்கை, அந்த நம்பிக்கை இன்னமும் நனவாகாமல் உள்ளது. எவ்வளவு நீண்ட , இடர்பாடு மிக்க பாதையாக இருப்பினும், எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளப்படினும் புரட்சியானது வெற்றிப் பெற்றே தீரும்; ந்ம்பிக்கை நனவாகும் என்பதில் நாம் உறுதிக் கொள்வோம்.

நக்சல்பரி முன்னும் பின்னும் சுனிதி குமார் கோஷின் நூலின் முன்னுரையிலிந்து. இன் நூலானது நக்சல்பரியின் நினைவூட்டல்கள் , குறிப்பிடுவது மற்றும் மதிப்பீடு உண்மையில், இந்த புத்தகம் இன்னும் அதனை பேச வேண்டியவர்களுக்கு ஆம் மார்க்சியம் லெனினியம் மாவோ சிந்தனையை தூக்கி பிடிக்கும் அணிகள் இதனை வாசிக்கவில்லை என்றே நினைக்கிறேன். நேர்மையான, முழு அளவிலான விமர்சனத்தோடு நடைமுறை தவறுகளை சுட்டிக் காட்டி நிகழ்வுகளை முன்னிருத்தியுள்ளார்.

தேவையை கருதி தொடர்ந்து எழுதுவேன்……

2).https://m.facebook.com/story.php?story_fbid=3087483314680101&id=100002553890383

Palani Chinnasamy

August 6 at 9:07 PM · 

தோழர் தா.சிவக்குமார் அவர்களின் “சாரு மசூம்தார் ஒரு திருத்தல்வாதி ” என்ற பதிவுக்கு பதிலளிக்கும் முகமாக இந்தப் பதிவு ஒரு முன்னுரையே

இரண்டாம் பதிவு…

திருத்தல்வாதம் பற்றி மார்க்சிய ஆசான்கள் கருத்து தொடர்ச்சியாக…

இரண்டாவது அகிலத்தில் சந்தர்ப்பவாத ஏகாதிபத்தியத்திற்கும் இருந்த ஒற்றுமை பற்றியும் லெனின் கூறினார், ஏகாதிபத்தியம் என்பதும் சமூக ஏகாதிபத்தியம் என்பதும் சொல்லில் சோசலிசம் பெயரில் ஏகாதிபத்தியம், சந்தர்ப்பவாதம் சீர்திருத்த வாதம் என்பது சமூக ஏகாதிபத்தியம் அல்லது சமூக தேசியவெறி என்ற நிகழ்வாக வளர்கிறது.

குருசேவ் திருத்தல்வாத கும்பல் லெனினாலும் ஸ்டாலினாலும் கட்டி வளர்க்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியையும் சோவியத் சோசலிச நாட்டையும் கைப்பற்றி அதிகாரத்துக்கு வந்ததன் மூலமாக சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியை திருத்தல்வாத கட்சியாக, சோசலிஸ ரஷ்யாவை சமூக ஏகாதிபத்தியம் மாற்றியமைத்தது, எவ்வாறாயினும் இரண்டுக்கும் சலுகை பெற்ற பிரபு குல வர்க்க அடிப்படை என்பதும் இரண்டும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் புரட்சி நடவடிக்கைகளை கைவிட்டு முதலாளி வர்க்கத்துடன் மிகப் பெரும்பான்மையான மக்களுக்கு எதிராக கூட்டுச் சேர்ந்து கொண்டவை என்பதிலும் வேறுபாடு இல்லை. எனவே தான் லெனின் இரண்டாம் அகில சந்தர்ப்பவாதிகளையும் மாவோ ரஷ்ய குருசேவ் புரட்டல்வாத கும்பலையும் முதலாளி வர்க்கத்தினர், என்றும் வர்க்க விரோதிகள் என்றும் அடையாளம் காட்டினார்.

சோஷலிச நாடுகளில் திரிபுவாதம் முதலாளித்துவ பாதைக்காக போராடுகிறது. மீண்டும் முதலாளித்துவத்தை மீட்டெடுக்க முயல்கிறது. சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் குருசேவ் புரட்டல்வாதத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தபோது உள்நாட்டில் முதலாளித்துவப் பாதையை அதற்கெதிரான போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த மாவோ கூறினார், திரிபுவாதிகள் சோசலிசத்துக்கும் முதலாளித்துவம் இடையிலான வேறுபாட்டை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கும் முதலாளித்துவ சர்வாதிகாரத்தை இடையிலான வேறுபாட்டை மறுக்கிறார்கள் .
முதலாளித்துவப் பாதையை சோசலிசப் பாதை என்றும் கூறுகிறார்கள். முதலாளித்துவப் பாதை என்பது சமுதாயத்தில் வர்க்கப் போராட்டத்தையும் பார்க்க பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிடுவதாகும் .

கலாச்சாரப் புரட்சியின் போது அதிகாரத்திலிருந்து முதலாளித்துவப் பாதையை மேற்கொள்ளும் நபர்கள் சுட்டிக்காட்டிய அவர்களை அகற்றி விட்டு பாட்டாளி வர்க்கப் புரட்சி அரைக்கூவல் விட்டார் மாவோ.
தொடரும்


3).https://m.facebook.com/story.php?story_fbid=3090285547733211&id=100002553890383

Palani Chinnasamy

August 7 at 9:09 PM · 

திருத்தல்வாதம் பற்றி நான் எழுதுவது தேவைதானா மற்றும் தோழர் Tha SivaKumar அவர்களுக்கு பதிலளித்த எனது பதிவுகளில் கேட்ட கேள்விக்கு பதிலாக எனது பழைய பதிவு கீழே:-

இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏறத்தாழ 100 ஆண்டுகள் நிறைவுறப் போகிறது ஆனால் அவை தனது இலக்கை அடையாமல் பல்வேறு சிக்கல்களில் சிக்குண்டு தவிக்கிறது. அதனை பற்றிய ஒரு தேடுதலே இந்தப் பதிவு….

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியானது 1951 ஆம் ஆண்டுவரை ஒரு முழுமையான வேலை திட்டத்தை உருவாக்கவேயில்லை ஏறத்தாழ 30 ஆண்டுகள் வேலைதிட்டத்தின் வழிகாட்டுதல் இல்லாமலே கழிந்துவிட்டது. CPI(ML) தொடங்கப் பட்ட போதே வேலை திட்டம் வைத்திருந்தது அதன் அடிப்படையில் கட்சி இயங்கவே இல்லை.

ரசியாவில் புரட்சிகர கட்சியை கட்டுவதற்க்கு முன்பே பல்வேறு புரட்சிகர குழுக்கள், மார்க்சிய வாசகர் வட்டங்கள் தோன்றியிருந்தன, 1895-ல் தொழிலாளர் விடுதலைக்கான போராட்ட குழு லெனினால் தோற்றிவிக்கப் படுகிறது. பல குழுக்கள் ஏதேசதிகாரத்தை தனித் தனியாக போராடி ஒன்றும் சாதிக்க முடியாது் என்றும் ஒன்றுபட்ட ரசிய புரட்சிகர கட்சியால் மட்டுமே சாதிக்க முடியும் என்றும் முடிவுக்கு வரும் லெனின், பலம் வாய்ந்த கட்சியை கட்ட புரட்சிகர குழுக்கள் சமூக ஜனநாயக சக்திகள் இவ்வாறு பல்வேறு குழுக்களை ஒற்றுமை படுத்த நிலவும் முரண்பாடுகளையும் குழப்பங்களையும் தீர்த்து , சித்தந்த ஒற்றுமை என்பது கட்சியின் வேலை திட்ட அடிப்படையில் அடைய வேண்டும்., என்று கூறுகிறார் லெனின்.

கட்சி கட்டப் பட்ட பின்னரே கட்சிக்குள் பல்வேறு போக்குகள் வருவதை தடுக்க லெனின் மேற்கொண்ட நடவடிக்கை பற்றி நாம் பேசுகிறோம் ஆனால் இங்கோ இன்று வரை கட்சி கட்டப் பட்வேயில்லை என்னே செய்ய…

1917 அக்டோபர் புரட்சிக்கு பின் உலகில் பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது, 1925 ல் இந்திய கம்யூனிச கட்சியும், சீன கம்யூனிச கட்சியும் ஏறக்குறைய அதே காலக் கட்டத்தில் உருவானது, இரண்டு கட்சிகளுக்கும் மூன்றாம் அகிலம் தொடர்சியாக வழிகாட்டுதலை அளித்தது. கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழிகாட்டலை சீன கம்யூனிஸ்ட் கட்சி சரியாக புரிந்து கொண்டு அதை தனது நாட்டின் சூழலுக்கு பொருத்தி மக்கள் ஜனநாயகம் படைத்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகிலத்தின் வழிகாட்டுதலை அதாவது ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி, ஏகாதிபத்திய பிற்போக்கு சக்திகளை தூக்கி எறிந்து மக்கள் ஜனநாயக அரசை நிறுவும்படியும், அதற்க்கு உடனடியாக பிரிந்துகிடக்கின்ற கம்யூனிச குழுக்களையும், தனி நபர்களையும் இணைத்து பலம் வாய்ந்த ஒன்று பட்ட கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவும் படி திரும்ப திரும்ப வலியுறுத்தியது. ஆனால் இன்றுவரை இந்தப் பணி நிறைவேறவில்லை.

CPI,CPM கட்சிகள் கம்யூனிசத்தின் அடிப்படை அரசியல் கோட்பாடுகளை புறகணித்து அதாவது மூன்றாம் அகிலத்தின் நிலைப்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டன அதாவது அகிலத்தின் வழி காட்டுதலை புறகணித்தது. பொருளாதார போராட்டங்களும், முதலாளித்துவ தேர்தலுக்கு மட்டுமே தயாரிப்பு செய்வதாகும். இவர்கள் மக்களை அரசியல் படுத்தாமல் வெறும் ஓட்டு சீட்டிற்க்காக என்பதாகி போனது.

பல ஆண்டுகள் CPM திரிபுவாதத்திற்கு எதிராக போராடி நக்சல்பாரி என அறியப் பட்ட இ.க.க (மா-லெ) தொடங்கப் பட்டது. மார்க்சியத்தின் புரட்சிகர ஆன்மாவை மீண்டும் நிகழ்ச்சி நிரலில் வைத்து, ஒடுக்கப் பட்ட மக்களுக்கு புரட்சிகர கட்சியின் தலைமையளிக்க சாருமஜீம்தார் முன்கையெடுத்தார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உயர்த்திப் பிடித்து, புரட்சியின் மூலம் சுரண்டும் வர்க்க அரசைத் தகர்ப்பது, சோசலித்துக்கான அமைதிவழி மாற்றத்தை நிராகரித்து, புரட்சிகர பலாத்காரத்தை ஏற்றல், பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக கம்யூனிஸ்ட் கட்சியை மாற்றியமைத்தல், புதிய ஜனநாயகப் புரட்சி,தொழிலாளி, விவசாயிகள் கூட்டணி அமைத்தல் போன்ற அரசியல் நிலைப்பாடுகளை அங்கீகரித்தது.
ஆனால்
வலது திருத்தல்வாத போக்குகளுக்கு சித்தாந்த ரீதியில் பலத்த அடி கொடுக்காமலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் இயங்குவதற்க்கான நெறிமுறைகள் மூன்றாம் அகிலத்தினால் உருவாக்கப் பட்டத்தை கவனத்தில் கொள்ளாமலும் கட்சி தொடங்கிய காலத்தில் குருச்சேவ் திருத்தல்வாதத்தை எதிர்த்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவப் போராட்டமான மாபெரும் விவாதத்தின் நிலைப்பாடுகளை கிரகித்துக் கொள்ளாமலும் கட்சி கட்டப் பட்டது. கொரிலாப் போரைத் தவிர மற்ற எல்லா போராட்ட வடிவங்களும் அமைப்பு வடிவங்களும் நிராகரிக்கப்பட்டன. இடது குறுங்குழுவாதத்தை புரட்சி வழியாக உயர்த்திப் பிடிக்கப்பட்டது.
இன்று ஒரு கட்சிக்கு பதிலாக பல குழுக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அனுபவத்தின் வாயிலாகவும், அரைகுறையாக கோட்பாடுகளை கிரகித்துக் கொண்டதன் மூலம் இன்று அறியப் படும் நிலைப்பாடுகள்.
எந்த ஒரு அமைப்பும் உண்மையான மார்க்சியத்தை கடைபிடிக்கிறாதா என்பதே என் கேள்வி.

விருப்பங்களிலிருந்து அல்லாமல் தமக்கு அப்பால் நிலவும் புறவய உண்மைகளிலிருந்து விசயங்களை பார்க்க வேண்டும் என்று மார்க்க்சியம் போதிக்கிறது. இந்த அரிச்சுவடி பாடத்தை இந்தியப் பொதுவுடைமை இயக்கம் குறிப்பாக மா-லெ என்று அறியப்படும் நக்சல்பாரி இயக்கம் புறக்கணித்து விட்டது, இன்று குழுக்களாக நீடிக்கிறது.

அனைத்து நாடுகளின் ஜனநாயகக் கட்சிகளுடைய ஐக்கியத்துக்காகவும், உடன்பாட்டுக்காகவும் கம்யூனிஸ்டுகள் பாடுபடுகின்றனர்.இங்கோ ஒரு அமைப்பே பல குழுக்கலாக சிதறுண்டு போய் கொண்டுள்ளது.

கம்யூனிஸ்டுகள் தங்கள் கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடிமறைப்பதை இழிவாகக் கருதுகின்றனர். இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்களை அடைய முடியும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றனர். கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது.
உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!
(கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் இருந்து)….


4).https://m.facebook.com/story.php?story_fbid=3087483314680101&id=100002553890383

Palani Chinnasamy

August 6 at 9:07 PM · 

தோழர் தா.சிவக்குமார் அவர்களின் “சாரு மசூம்தார் ஒரு திருத்தல்வாதி ” என்ற பதிவுக்கு பதிலளிக்கும் முகமாக இந்தப் பதிவு ஒரு முன்னுரையே

இரண்டாம் பதிவு…

திருத்தல்வாதம் பற்றி மார்க்சிய ஆசான்கள் கருத்து தொடர்ச்சியாக…

இரண்டாவது அகிலத்தில் சந்தர்ப்பவாத ஏகாதிபத்தியத்திற்கும் இருந்த ஒற்றுமை பற்றியும் லெனின் கூறினார், ஏகாதிபத்தியம் என்பதும் சமூக ஏகாதிபத்தியம் என்பதும் சொல்லில் சோசலிசம் பெயரில் ஏகாதிபத்தியம், சந்தர்ப்பவாதம் சீர்திருத்த வாதம் என்பது சமூக ஏகாதிபத்தியம் அல்லது சமூக தேசியவெறி என்ற நிகழ்வாக வளர்கிறது.

குருசேவ் திருத்தல்வாத கும்பல் லெனினாலும் ஸ்டாலினாலும் கட்டி வளர்க்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியையும் சோவியத் சோசலிச நாட்டையும் கைப்பற்றி அதிகாரத்துக்கு வந்ததன் மூலமாக சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியை திருத்தல்வாத கட்சியாக, சோசலிஸ ரஷ்யாவை சமூக ஏகாதிபத்தியம் மாற்றியமைத்தது, எவ்வாறாயினும் இரண்டுக்கும் சலுகை பெற்ற பிரபு குல வர்க்க அடிப்படை என்பதும் இரண்டும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் புரட்சி நடவடிக்கைகளை கைவிட்டு முதலாளி வர்க்கத்துடன் மிகப் பெரும்பான்மையான மக்களுக்கு எதிராக கூட்டுச் சேர்ந்து கொண்டவை என்பதிலும் வேறுபாடு இல்லை. எனவே தான் லெனின் இரண்டாம் அகில சந்தர்ப்பவாதிகளையும் மாவோ ரஷ்ய குருசேவ் புரட்டல்வாத கும்பலையும் முதலாளி வர்க்கத்தினர், என்றும் வர்க்க விரோதிகள் என்றும் அடையாளம் காட்டினார்.

சோஷலிச நாடுகளில் திரிபுவாதம் முதலாளித்துவ பாதைக்காக போராடுகிறது. மீண்டும் முதலாளித்துவத்தை மீட்டெடுக்க முயல்கிறது. சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் குருசேவ் புரட்டல்வாதத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தபோது உள்நாட்டில் முதலாளித்துவப் பாதையை அதற்கெதிரான போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த மாவோ கூறினார், திரிபுவாதிகள் சோசலிசத்துக்கும் முதலாளித்துவம் இடையிலான வேறுபாட்டை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கும் முதலாளித்துவ சர்வாதிகாரத்தை இடையிலான வேறுபாட்டை மறுக்கிறார்கள் .
முதலாளித்துவப் பாதையை சோசலிசப் பாதை என்றும் கூறுகிறார்கள். முதலாளித்துவப் பாதை என்பது சமுதாயத்தில் வர்க்கப் போராட்டத்தையும் பார்க்க பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிடுவதாகும் .

கலாச்சாரப் புரட்சியின் போது அதிகாரத்திலிருந்து முதலாளித்துவப் பாதையை மேற்கொள்ளும் நபர்கள் சுட்டிக்காட்டிய அவர்களை அகற்றி விட்டு பாட்டாளி வர்க்கப் புரட்சி அரைக்கூவல் விட்டார் மாவோ.
தொடரும்


5).https://m.facebook.com/story.php?story_fbid=3087450034683429&id=100002553890383

தோழர் தா.சிவக்குமார் அவர்களின் “சாரு மசூம்தார் ஒரு திருத்தல்வாதி ” என்ற பதிவுக்கு பதிலளிக்கும் முகமாக இந்தப் பதிவு ஒரு முன்னுரையே அவரின் மற்றவாதங்களை நான் இப்பொழுது எதிர் கொள்ளவில்லை அவரின் “சாரூ” மீதான விமர்சனங்களை மட்டுமே பதிலளிக்க முனைகிறேன் தோழ்ர்களே மார்க்சிய தோழர்கள் தங்களின் கருத்துகளை பதிவிடலாம்.
http://ieyakkam.blogspot.com/2020/08/blog-post.html

இன்று நம் கண் முன் :-

ரஷ்யா, சீனாவிலுள்ள சோஷலிச அரசுகள் வீழ்த்தப்பட்டு பலம்வாய்ந்த ரஷ்ய, சீனக் கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கலைப்பதில் ஏகாதிபத்தியவாதிகள் வெற்றி பெற்றுவிட்டார்கள்.
நிலைமை இப்படி இருக்க
ஆயுத பலத்தோடு மக்கள் செல்வாக்குப் பெற்ற சில மா.லெ.குழுக்களைக் களின் உள் நுழைந்து அதனை சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆளும் வர்க்கம் இதனை கருத்தில் கொண்டே மேலே செல்வோம்.

இந்தியாவில் புரட்சிக்கான ஒரு கம்யுனிஸ்ட் கட்சி இன்னமும் கட்டப்படதா நிலையில் எத்தனை எத்தனை போலி புரட்சியாளர்கள் ஆங்காங்கே காணப் படும் இந்தச் சூழ்நிலையில் பலம்வாய்ந்த கட்சிகளையே ஒழித்துக் கட்டுவதில் வெற்றி பெற்ற ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாவில் நிலவுகின்ற குழுக்களைக் கலைப்பதற்கு எந்த அளவிற்குச் செயல்படுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படி பட்ட சூழ் நிலையில் தோழர் சிவக்குமார் கூறும் திருத்தல் வாதம் பற்றி நுழையும் முன் மார்க்சிய ஆசான்கள் கூறிய விளக்கங்கள் கீழ் காண்போம்:-

திரிபு வாதம் என்பது தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இருக்கும் முதலாளித்துவ போக்கே ஆகும் – லெனின்.
திரிபுவாதம் முதலாளித்துவ சித்தாந்தத்தின் ஒரு வடிவம் என்றார் மாவோ.
இது உதட்டளவில் மார்க்சியம் பேசுகிறது. உண்மையில் மார்க்சியத்தின் புரட்சிகர சாராம்சத்தை தூக்கி எறிந்து விடுகிறது. தொழிலாளி வர்க்க இயக்கத்தில் புரட்சிகர நடவடிக்கைகளையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கைவிட்டு, பாராளுமன்ற வாதத்தையும், சட்டவாத்த்தையும் சீர்திருத்தவாத மற்றும் பொருளாதார வாத்த்தையும் பிரசாரம் செய்கிறது.

இரண்டாம் அகிலத்தில் சந்தர்ப்பவாததின் பொருளாதார அடிப்படையை விவரித்த லெனின் , அதன் அரசியல் உள்ளடக்கத்தை பின்வருமாறு தொகுத்து அளித்தார்; வர்க்கங்களின் ஒத்துழைப்பு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை மறுத்தல், புரட்சிகர நடவடிக்கைகளை மறுத்தல், முதலாளித்துவ சட்டமுறையை நிபந்தனை இன்றி ஏற்றுக் கொள்ளுதல், பாட்டாளி வர்க்கத்திடம் நம்பிக்கையின்மையும் முதலாளி வர்க்கத்திடம் நம்பிக்கை போன்றவை என்றும் சந்தர்ப்பவாத முதலாளித்துவ சோசலிசமள அன்றிபாட்டாளி வர்க்கம் சோஷலிஸம் அல்ல.


6).
https://m.facebook.com/story.php?story_fbid=3078928855535547&id=100002553890383

Palani Chinnasamy

August 3 at 6:22 PM · 

சமூகப் புரட்சிப் பற்றி மார்க்ஸ் கூறுகிறார்:-
“…உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.
வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு – அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு – இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.
பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டுமானம் முழுவதையுமே சீக்கிரமாகவோ அல்லது சற்றுத் தாமதமாகவோ, மாற்றியமைக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கிற பொழுது உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களுக்கும் (இயற்கை விஞ்ஞானத்தைப் போல இதைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்) சட்டம், அரசியல், மதம், கலைத் துறை அல்லது தத்துவஞானத் துறைகளில் – சுருக்கமாகச் சொல்வதென்றால் சித்தாந்தத் துறைகளில் – இந்தப் போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்து கொண்டு அதில் இறுதி முடிவுக்காகப் போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும்.

எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை, புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனித குலம் தன்னால் சாதிக்கக் கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாதபடி விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் முன்பே இடம் பெற்ற பிறகு அல்லது குறைந்தபட்சம் உருவாக்கிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சினையே தோன்றுகிறது என்பது அதிக நுணுக்கமாக ஆராயும் பொழுது புலப்படும்.” (முன்னுரை – அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு).
தோழர் வேலன் முகநூலில் இருந்து

https://www.marxists.org/reference/archive/mazumdar/index.htm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *