பாராளுமன்ற தேர்தலை பற்றிய ஒரு தேடுதல்-cp
தேர்தலை எப்படி கையாளுவது.
முதற்க்கண் நமது மார்க்சிய ஆசான்கள் வார்த்தையில் தேர்தல் பற்றிய கருத்துகளை பார்ப்போம்.
1871 ஆம் ஆண்டில் பாரிஸ் கம்யூனில் பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ அமைப்பை அப்படியே பயன்படுத்தி கொள்ள முடியாது என்றும், பாட்டாளி வர்க்கம் தனக்கான பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிறுவிக் கொள்வதே முதலாளித்துவ அரசதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர இயலும் என்றும் மார்க்ஸ் முடிவுக்கு வந்தார்.
“அனைவருக்கும் வாக்குரிமை எனபது நமது எண்ணிக்கையை ஒருமுறை கணக்கு பார்க்க அனுமதிக்கிறது என்பதைவிட வேறெந்த பலனும் இல்லை. மக்கள் அனைவர் முன்பும், நமது தாக்குதலை எதிர்த்துத் தமது கருத்துகளையும், செயல்களையும் தாங்கி தற்காத்து முன்வரும்படி எல்லா கட்சியையும் கட்டாயப் படுத்தியது.நமது எதிரிகளுடனும் அதற்க்கு வெளியே மக்களிடைய்ற்யும் பேசுவத்ற்க்கு ஒரு மேடையைத்தந்தது. பத்திரிக்கை மூலமோ கூட்டங்கள் மூலமோ கருத்து வெளியிடுவதை விடவும் முற்றிலும் வெறுபட்ட அதிகார பலத்தோடும், சுதந்திரமாயும் பேசுவதற்க்கு வகை செய்தது”-எங்கெல்ஸ் (பிரான்சில் வர்க்க போராட்டங்கள் 1848-1850 நூலுக்கான முன்னுரையில்). முதலாளித்துவ நிறுவனங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என எங்கெல்ஸ் கூறுவதைக் கொண்டு புரட்சியைக் கைவிட வேண்டும் என ஒருபோதும் அர்த்தப் படுத்தி கொள்ளக் கூடாது. அவர், புரட்சிதான் தொழிலாளி வர்க்கத்தின், ஒரே உண்மையான வரலாற்று உரிமை என்று கூறினார்.
பாராளுமன்றம் வரலாற்று வழியில் தோன்றுவதாகும், முதலாளித்துவப் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்குப் போதுமான பலமுடையோராகும் வரை நம்மால் அதை அகற்றிவிட முடியாது. குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளில் முதலாளித்துவப் பாராளுமன்றத்தில் உறுப்பினராய் இருந்து கொண்டுதான் முதலாளித்துவ சமுதாயத்தையும் பாராளுமன்ற முறையையும் எதிர்த்துப போராட்டம் நடத்த முடிகிறது. போராட்டத்தில் முதலாளித்துவ வர்க்கம் கையாளும் அதே ஆயுதத்தைப் பாட்டாளி வர்க்கமும் – முற்றிலும் மாறான குறிக்கோள்களுக்காக என்பதைக் கூறத் தேவையில்லை – உபயோகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இவ்வாறு இல்லை என்று உங்களால் சாதிக்க முடியாது. இதனை நீங்கள் நிராகரித்து வாதாட விரும்பினால், உலகின் புரட்சிகர நிகழ்ச்சிகள் அனைத்தின் அனுபவத்தையும் நீங்கள் விட்டொழிக்க வேண்டியிருக்கும்.”
(லெனின் பாராளுமன்ற முறை பற்றிய சொற்பொழிவு கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் நிகழ்த்தப் பெற்றது 1920, ஆகஸ்டு 2)
இந்திய பாராளுமன்றம் பற்றிய ஒரு கண்ணோட்டம்
இந்திய அரசானது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களை முன்னிறுத்தி, அதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளை(?) தேர்ந்தெடுத்து ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்து வருகிறது. வெளித்தோற்றத்தில் பார்க்கும்பொழுது இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசமைப்பு போல் தோன்றினாலும், இங்கு மக்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மட்டுமே உரிமை உண்டு, அதற்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களுக்காக எந்த வேலையையும் செய்யவில்லை என்றாலோ, மக்கள் நலனுக்கு விரோதமான செயலில் இறங்கினாலோ,அவரை ஒன்றும் செய்ய இயலாது. தேர்ந்தெடுக்கப்பட மட்டுமே உரிமை, அவர்களை திருப்பி அழைக்க எந்த வித உரிமையும் இல்லை.
முதலாளித்துவ நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், மேம்போக்காகதொழிலாளர்கள், விவசாயிகள், இதர உழைக்கும் மக்களின் சில சீர்த்திருத்த நலன்கள் குறித்து பேசினாலும் கூட அவை ஆளும் வர்க்கங்களின் நலனுக்கு உட்பட்டே அதை செய்கின்றன. இந்த கட்சிகள் தற்போது நிலவி வரும் சமூக அமைப்பே (சுரண்டல் தன்மையுடைய) அத்தனை சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் என்றும், தனிச் சொத்துடைமையை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவ சமூகமே மக்களின் நலன் காக்கும் சமூகம் என்று பறைச்சாற்றி ஆளும் வர்க்கங்களை தாங்கி பிடிக்கின்றன.
வறுமை, வேலை இல்லாத நிலை, விலையேற்றம், ஊழல், இலஞ்சம், அரசின் அடக்குமுறை உள்ளிட்ட காரணங்களால் மக்களிடையே ஒரு எழுச்சிகரமான சூழல் உருவாகும் போது, சாதி, மத, இன, மொழி, வட்டார சிக்கல்களை முன்னுக்கு நிறுத்தி அடித்தட்டு மக்களிடையே பிளவுகளை உருவாக்குகிறது. மேலும் ஆட்சியில் இருக்கும் கட்சியின் அனுகுமுறை தான் சமூக சிக்கல்களுக்கு காரணம் என்று கூறி புதிய கட்சிகளை (முதலாளித்துவ நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும்) முன்னுக்கு கொண்டு வந்து அவர்களை ஆட்சி பீடத்தில் ஏற்றி தன்னுடைய வர்க்க நலன்களை முதலாளித்துவ வர்க்கம் காப்பாற்றி கொள்கிறது. இதன் மூலம் முதலாளித்துவமானது தன் மீது இருக்கும் எதிர்ப்பை தற்காலிகமாக மட்டுப்படுத்தி, திசைதிருப்புகிறது. தன்னுடைய வீழ்ச்சியை, அழிவை தற்காலிகமாக தள்ளி வைக்கிறது.
இத்தகைய சூழலில், புரட்சிகர குழுக்கள் பாராளுமன்றத் தேர்தல்களில் பங்கு கொள்வதற்காக குழப்பமடைந்துள்ளன. தற்போது நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களில் பங்கு கொள்வதற்காக களம் இறங்கியுள்ளன. பாராளுமன்றப் பாதையில் பங்கெடுத்துக் கொள்வது குறித்து புரட்சிகர கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருந்து வருகின்றன.
சிபிஐ, சிபிஎம் கட்சிகள் முழுக்க முழுக்க பாராளுமன்றப் பாதையிலேயே மூழ்கி விட்டன. பாரளுமன்றத் தேர்தலில் பங்கெடுத்து குரல் கொடுப்பது மட்டுமே பிரதான மற்றும் ஒரே பணியாக கொண்டுள்ளது. மக்களை சமூக மாற்றத்திற்கான அணி திரட்டும் பாதையில் பயணிப்பதற்கான எந்தத் திட்டமும் இந்தக் கட்சிகளிடம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. கட்சியின் உயர்மட்டத் தலைவர்களே, அதாவது பொலிட்பீரோ உறுப்பினர்களே தேர்தல் களத்தில் நிற்கின்றனர். பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாட்டை கட்சி கட்டுப்படுத்த முடிவதில்லை.
கட்சியின் அனைத்து நடவடிக்கைகளும் பாராளுமன்ற, சட்டமன்ற நலன்களே தீர்மானிக்கின்றன. கட்சியும் பாராளுமன்றப் பாதையும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதபடி பிண்ணிப் பிணைந்துள்ளது. கட்சியின் அடிமட்டத்தில் இருக்கும் ஊழியர்களின் தன்னலங்கருதாத உழைப்பை மேல்மட்டத்தில் இருக்கும் கட்சிப் பொறுப்பாளர்களும், பாராளுமன்ற சட்டமன்றப் பிரதிநிதிகளும் தங்கள் நலனுக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வரும் நிர்வாகிகள் பெரும்பாலும் முதலாளித்துவ சிந்தனையாளர்களாகவே உள்ளனர். சில சீர்த்திருத்த நடவடிக்கைகள் மூலம் மக்கள் திரளை திரட்ட நினைப்பதும், பாராளுமன்றப் பாதை மூலமாகவே சோசலிசத்தை (உண்மையில் அவர்களுக்கு அப்படி ஒரு திட்டம் இருக்கிறதா என்பதும் கேள்விக்குறியே!) நோக்கி பயணிப்பதுமாக இந்த கட்சிகளின் வழிமுறை உள்ளது.
சிபிஐ, சிபிஎம்மின் திருத்தல்வாதத்தை எதிர்த்து உருவானஎம்எல்இயக்கமானதுபல பிரிவுகளாக பிளவுண்டு, இன்று ஆங்காங்கே பிரதேசம் சார்ந்த – பகுதி சார்ந்த குழுக்களாகஉள்ளது. ஒருபுறம்மார்க்சியஅரசியலைமக்களிடையேகொண்டுசென்று அவர்களை அணிதிரட்டுவதில் பின்னடைவை சந்தித்து வரும் வேளையில், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் புரட்சிகர குழுக்கள் பங்கேற்று, அங்கும் சட்டமன்ற- நாடாளுமன்ற அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்த வேண்டும். சட்டமன்ற – நாடாளுமன்றங்களில் நடைபெறும் மக்கள் விரோத செயல்களை அனைத்து தளப் பிரதேசங்களுக்கும் (புரட்சிகர குழுக்கள் பலவீனமாக உள்ள மற்றும் தளப்பகுதிகள் நிறுவாத இடங்கள்) கொண்டுச் சென்று அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் ஆளும் வர்க்கங்களை அம்பலப்படுத்த வேண்டும். உழைக்கும் மக்கள் இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் வரையில், முதலாளித்துவ பாராளுமன்ற முறையில் பங்கெடுத்து அதனை அம்பலப்படுத்த வேண்டும் என்பது புரட்சிகர குழுக்களின் கடமையாகும். நடைமுறையில் இருக்கும் பாராளுமன்ற – சட்டமன்ற முறையானது பெரும்பான்மையாக இருக்கும் உழைக்கும் மக்களுக்கு எந்தவித தீர்வையும் தர இயலாது என்பதை மக்களிடம் பரப்புரை செய்வது தற்போதைய கடமையாகும்.
முடிவுரை:
சட்ட விரோதமான மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை இணைப்பதை செயல்தந்திரமாகக் கொண்டுள்ளதாக கூறிக் கொள்ளூம் மா-லெ அமைப்பு பாராளுமன்ற தேர்தலை புரட்சிகர அரசியல் பிரச்சாரத்திற்க்கு பயன்படுத்தி கொள்ளவதும், புரட்சிகர நட்பு சக்திகளை நேச அணிகளை, ஆளும் வர்க்க மற்ற்டும் இதர வர்க்க அரசியல் கட்சிகளிடமிருந்து வென்றெடுக்கவும், பரந்த அரசியல் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடவும், புரட்சிகர சக்திகளை தக்கவைக்கவும், வர்க்க போராட்டத்தை வளர்தெடுக்கவும் இந்த தேர்தல் பிரச்சாரம் பயனலிக்கும், மற்றும் பாராளுமந்த்திற்கு வெளியிலான போராட்டங்களில்லும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி புடம் போட்டு எடுக்கப் பட்ட தெளிவான அனுபவங்களைப் பெற்றிருக்க வேண்டும். மேலும் அவற்றை குறிப்பான சூழல்களுக்குத் தக்கவாறு இயங்கியல் ரீதியாக இணைக்க கற்று கொள்ள வேண்டும்.