“#செங்கோட்டைக்குள்_புகுந்த_தீப்சித்துவின்#கும்பல்_மோடி_அமித்ஷாவின்_கைக்கூலிகளேதார்மீக பொறுப்பேற்று எங்களை நாங்களே தண்டித்துக் கொள்கிறோம்.“#நாளை_விவசாயிகள்_உண்ணாவிரதம்!வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசுத் தினத்தன்று தலைநகர் தில்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியின்போது ஒரு குறிப்பிட்ட தரப்பினர், வழிகாட்டு நெறிமுறையை மீறியதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை சம்பவங் களுக்கு தார்மீகப் பொறுப்பேற்றுக் கொள்வதாக சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM ஒன்றுபட்ட விவசாயிகள் முன்னணி) கூறியுள்ளது. நடந்த அந்தத் தவறுக்கு பொறுப்பேற்று விவசாயிகள் தங்களுக்குத் தாங்களே தண்டனை கொடுத்துக்கொள்ளும் விதமாக ஜனவரி 30 அன்று மகாத்மா காந்தி தியாக தினத்தையொட்டி, நாள் முழுவதும் உண்ணாவிரதம் மேற்கொள்வது என்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிவித்து உள்ளது.மோடி அரசின் கொடிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியை முற்றுகையிட்டு, 1.1டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு பதிவாகி யுள்ள மிக மிக உறைபனி குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த 61 நாட்களாக, இந்த உலகின் மிகப் பிரம்மாண்டமான விவசாயிகள் எழுச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் உருவான அகில இந்தியவிவசாயிகள் போராட்ட ஒருங்கி ணைப்புக்குழுவின் ஒருங்கி ணைப்பில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்கள் இணைந்து சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற பதாகையின்கீழ் இந்த பிரம்மாண்டமான எழுச்சியை நடத்தி வருகின்றன.#பாஜக_ஆட்சியின்_திட்டமிட்ட_சூழ்ச்சி!இதற்கு ஆதரவாக நாடு முழுவதும் விவசாயிக ளும் தொழிலாளர்களும் தொடர் போராட்டங்க ளில் கடந்த 2 மாத காலத்திற்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சாரச் சட்டம் ஆகியவற்றை ரத்துசெய்ய வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் நாட்டையே உலுக்கியுள்ள இந்த பேரெழுச்சியின் உச்சக்கட்ட போராட்டங்களில் ஒன்றான ஜனவரி 26 குடியரசுத் தினத்தன்று தில்லியை முற்றுகை யிட்டு டிராக்டர் அணிவகுப்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டு, பேரெழுச்சியுடன் டிராக்டர் பேரணி நடைபெற்றது. நாடு முழுவதும் டிராக்டர் பேரணிகளும், இரு சக்கர வாகனப் பேரணிகளும் நடைபெற்றன. தில்லியில் நடந்த அந்தப் பேரணியின் போது ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மட்டும் பேரணியிலிருந்து விலகிச் சென்று செங்கோட்டைக்குள் நுழைந்து தேசியக் கொடிக்கு அருகிலேயே வேறு ஒரு கொடியை ஏற்றிய சம்பவமும் இதையொட்டி நடந்த வன்முறைச் சம்பவங்களும், விவசாயிக ளின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் விதமாக #பாஜக_ஆட்சியாளர்களால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட சூழ்ச்சி என்பது அம்பலமாகியுள்ளது. இந்த நிலையில்ஜனவரி 27 புதனன்று மாலை சிங்கு எல்லையில் சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர்கள் பேட்டியளித்தனர். அப்போது, பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி முற்றுகைப் பேரணி நடத்துவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்தனர். எனினும், எத்தனை நாட்கள்ஆனாலும் மூன்று விவசாய சட்டங்களையும் முற்றாக ரத்து செய்யும் வரையிலும் விவசாயிகளின் போராட்டம் உறுதியாக தொடரும் என்றும் அறிவித்தனர்.#தார்மீகப்_பொறுப்பேற்கிறோம்!பேட்டியின்போது ராஷ்டிரிய கிசான் மஸ்தூர் மகாசங்கத்தின் தலைவரான ஷிவ்குமார் சர்மா காக்காஜி, “டிராக்டர் பேரணிக்கு அழைப்பு விடுத்தது நாங்கள் தான், எனவே அங்கு நடந்த சம்பவங்களுக்கு நாங்களே தார்மீகமாக பொறுப் பேற்று கொள்கிறோம்” என்று தெரிவித்தார். “இந்த மாபெரும் இயக்கத்தில் தவறான நபர்கள் ஊடுருவியிருக்கிறார்கள் என்பதை அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்த நாங்கள் தவறி விட்டோம். எனவே அந்தத் தவறுக்கு நாங்கள் பொறுப்பேற்று கொள்கிறோம்” என்றும் அவர் கூறினார்.எனினும் டிராக்டர் பேரணிக்குள் புகுந்து குழப்ப த்தை ஏற்படுத்தி வன்முறையை தூண்டி விட்டவ ர்கள் #மோடி_அமித்ஷா ஆகிய இரட்டையர்களால் ஏவிவிடப்பட்ட ஏஜெண்டுகள் தான் என்பதை நாங்கள் அறிவோம்; தேசிய அளவில் இந்த பேரியக்கத்திற்கு கிடைத்துள்ள மரியாதையையும், வரவேற்பையும், ஆதரவையும் சீர்குலைப்பதே அவர்களது அடிப்படை நோக்கம் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்கள் கூறினர்.தேசத்தின் தலைநகரில் குடியரசு தினத்தன்று நடந்த அந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான காட்சிகள், விவசாயிகளின் பேரியக்கத்திற்கு கிடைத்து வரும் ஆதரவில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று குறிப்பிட்ட அவர்கள், எனினும், வரலாற்றுச் சிறப்புமிக்க டிராக்டர் பேரணிகளில் பங்கேற்றவர்களில் 99.9 சதவீதம் விவசாயிகள் திட்டமிட்ட முறையிலும், அமைதியான முறையிலும் அணிவகுத்து வந்தார்கள் எனத் தெரிவித்தனர்.#பாதையிலிருந்து_விலகியவர்களை#தடுக்காதது_ஏன்?“விவசாயிகளின் இந்த எழுச்சிமிக்க இயக்கத்தை உடைப்பதற்கு ஏற்கெனவே மத்திய அரசு பல சூழ்ச்சிகளையும் சதிகளையும் மேற்கொண்டது. அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. இந்தப் பேரணியின் போதும் அரசாங்கம் சதி செய்தது. இந்தச் சதியும் தோல்வியில் தான் முடிந்திருக்கிறது” என விவசாயிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான பல்பீர் சிங் ரஜேவால் குறிப்பிட்டார். ஒருகுறிப்பிட்ட பிரிவினர் திட்டமிட்ட பாதையிலி ருந்து விலகிய போது #காவல்துறையினர்#அவர்களை_தடுக்காமல் தில்லியின் மையப் பகுதிக்குள் செல்லுமாறு அனுப்பி வைத்தார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.திட்டமிட்ட பாதையிலிருந்து விலகி சில விவசாயிகளை அழைத்துச் சென்றது கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி (கேஎம்எஸ்சி) என்ற அமைப்பு தான் என குறிப்பிட்ட சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்கள் மேற்படி அமைப்பின் தலைவர் என்ற பெயரில் மோடி – அமித்ஷாவின் ஏஜெண்டான நடிகர் தீப் சித்து அத்துமீறி விவசாயிகளை திசைதிருப்பி கொண்டு சென்றது மட்டுமல்ல, வன்முறையைத் தூண்டவும் செய்தார் என்றும் குற்றம் சாட்டினர்.#மோடி_அமித்ஷாவின்_கைக்கூலி!செங்கோட்டையில் நிசான் சாகிப் என்ற சீக்கிய புனிதக்கொடி ஏற்றப்பட்ட சம்பவத்தை தனது முகநூல் பக்கத்தில் அந்த இடத்திலிருந்தே தீப் சித்து நேரடி ஒளிபரப்பு செய்தது எப்படி எனக் கேள்வி எழுப்பிய ரஜேவால்,“இந்த நபர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாவால் அனுப்பப்பட்ட நபர். அவர்களது கைக்கூலிதான் இவர் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன” என்றும் கூறினார்.#தீப்சித்து, சம்யுக்த கிசான் மோர்ச்சா வின் கீழ் செயல்படும் விவசாயிகள் அமைப்பின் தலைவர் போல தன்னை காட்டிக் கொண்டவர் என்ற போதிலும் அவர் பாஜகவின் கைக்கூலி என்பது பகிரங்கமாக கடந்த இரண்டு நாட்களாக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக எம்.பி., சன்னி தியோலின் பிரச்சார முகவராக செயல்பட்டவர் இவர். இப்போது செங்கோட்டையில் அத்துமீறி கொடியேற்றிய சம்பவம் அம்பலப்பட்டதால், சித்துவுக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்று பாஜக எம்.பி., சன்னி தியோல் தற்போது கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.#காவல்துறைக்கு_தெரிந்தும்_நடவடிக்கை#எடுக்காதது_ஏன்? தில்லிக்கு அருகில் சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் கடந்த 60 நாட்களாக முற்றுகையிட்டு அமர்ந் திருக்கும் விவசாயிகள்,பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் 32 சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள். இதில் கே.எம்.எஸ்.சி. சங்கம் இடம்பெறவில்லை. இந்நிலையில் காஸிப்பூர் எல்லையில் இந்தச் சங்கத்தை சேர்ந்தவர்கள், குடியரசு தினத்திற்கு முதல் நாள் உள்ளே நுழைந்திருக்கிறார்கள்; சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்கள், குடியரசு தின டிராக்டர் பேரணிக்கான அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டுச் சென்ற பிறகு, மேற்படி கே.எம்.எஸ்.சி.சங்கத்தைச் சேர்ந்த சிலர் சில விவசாயிகளை கூட்டி திட்டமிட்டப் பாதையில் நாம் செல்லக்கூடாது என்று பகிரங்கமாக பேசியிருக் கிறார்கள். அது காவல்துறைக்கு தெரிந்திருக்கிறது. ஆனாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்கள் கேள்வி எழுப்பினர். சிங்கு எல்லையில் போராட்டம் துவங்கிய 13 நாட்களுக்கு பிறகு கே.எம்.எஸ்.சி. சங்கத்தைச் சேர்ந்த சிலர் மட்டும் வந்தார்கள்; அவர்கள் மத்திய அரசாங்கத்தின் ஏஜெண்டுகள் என்பது அப்போது தெரிந்திருக்க வில்லை. அன்று முதல் அந்த குறிப்பிட்ட சிலர் மட்டும் சிங்கு எல்லையில் காவல்துறையினர் போட்டிருந்த தடுப்புகளுக்கு முன்பக்கம் இடம் கொடுத்து காவல்துறையினரால் அமர வைக்கப்பட்டனர். ஒட்டுமொத்த விவசாயிகளும் காவல்துறையின் தடுப்புக்கு பின்னால் தான் அமர்ந்திருக்கிறார் கள். அவ்வப்போது இந்த நபர்களை காவல்துறை அதிகாரிகள் வந்து சந்தித்து விட்டுச் செல்வதும் வழக்கமாக இருந்தது. இதையெல்லாம் விவசாயிகளும், தலைவர்களும் கவனித்த போதிலும், அவர்கள் அரசாங்கத்தின் ஏஜெண்டுகளாக இருப்பார்கள் என்று கருதவில்லை.#ஏஜெண்டுகள்_மூலம்_நடத்திய_காவல்துறை#வன்முறை!இந்த விபரங்களை செய்தியாளர்களிடம் தெரிவித்த சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்கள், குடியரசுத் தினத்தன்று தில்லியின் மையப் பகுதியில் நுழைந்து செங்கோட்டைக்குள்ளேயே நுழைந்து நான்கு மணி நேரம் வன்முறை நடத்தவும் கோட்டையில் ஏறி கொடி ஏற்றவும் அனுமதித்தது யார் என்ற கேள்வியை எழுப்பினர். குடியரசுத் தினத்தன்று செங்கோட்டையில் மிக மிக அதிகபட்ச பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும் போது இது எப்படி சாத்தியம்? என்றும் கேள்வி எழுப்பிய அவர்கள், இது முற்றிலும் காவல்துறையினரால் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சூழ்ச்சி என்றும் அந்த சூழ்ச்சியை தங்களது தயாரிப்பான ஏஜெண்டுகள் மூலம் நிறைவேற்றி இருக்கிறார்கள் என்றும் கூறினர்.செங்கோட்டையில் பஞ்சாபியரின் புனிதக்கொடி எனப்படுகிற நிசான் சாகிப் ஏற்றப்பட்டது என்பது திட்டமிட்டு பஞ்சாப் விவசாயிகளை நாட்டு மக்கள் மத்தியில் சிறுமைப்படுத்துகிற மோடி அரசின் சதிச் செயலே என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாயத்தும் மற்றொருவரான காக்காஜியும் கூறினர். ராகேஷ் திகாயத் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். காக்காஜி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.இப்பேரணியின் போது இந்திய தேசியக் கொடியை விவசாயிகள் அவமதித்து விட்டதாக #மோடி_அரசுக்கு_ஆதரவான ஊடகங்கள் கூப்பாடு போடுகின்றன. இதுதொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்த கிசான் மோர்ச்சா தலைவர்கள், அணிவகுத்து வந்த ஒவ்வொரு டிராக்டர்களிலும் தேசியக் கொடி தான் பறந்தது என்பதை மறந்துவிடாதீர்கள் என்று கூறினர்.#நகைப்புக்குரியது!இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கிசான் மோர்ச்சா தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ், சங் பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் தேசத்தின் மூவண்ணக் கொடியை நாங்கள் அவமதித்து விட்டதாக கூச்சல் போடுவது நகைப்புக்குரியது; 2002ஆம் ஆண்டு வரை அவர்கள் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் தேசியக் கொடியை ஏற்றியதாகவோ, தேசியக் கொடியை மதித்ததாகவோ சரித்திரம் இல்லை எனச் சாடினார்.தில்லியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் விவசாயிகளின் எழுச்சிமிக்கப் போராட்டங்கள் தொடர்ந்து வீச்சுடன் நடந்து வரும் நிலையில், உங்களால் இந்த இயக்கத்தை கட்டுக்கோப்புடன் இனியும் நடத்திச் செல்ல முடியுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்கள் நிச்சயம் முடியும் என்றும், இந்த தலைவர்கள் தான், குடியரசுத்தின டிராக்டர் பேரணியின் போது செங்கோட்டையை நோக்கி ஒரு கும்பல் அத்துமீறி சென்று வன்முறைக்கு வித்திட்டுவிட்டது என்ற தகவல் கிடைத்தவுடனே ஒட்டு மொத்த டிராக்டர்களையும் ஆங்காங்கே நிறுத்தி திரும்ப சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளுக்கு செல்லுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்கள் என்றும் அதை ஏற்று விவசாயிகள் உடனடியாக திரும்பினார்கள் என்றும் தெரிவித்தனர்.#சிங்கு_எல்லையிலிருந்து_அனிதா_ஜோசுவா#அளித்த_விபரங்களுடன்…பாஜகவின் சதிகளை முறியடித்து முன்னேறுவோம்!குடியரசுத் தினத்தன்று நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க டிராக்டர் அணிவகுப்பில் பங்கேற்ற கோடானுகோடி விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் பாராட்டுகிறது. தேசத்தின் தலைநகரைச் சுற்றி லட்சக்கணக்கான டிராக்டர்களிலும், இதர வாகனங்களிலும் தேசியக் கொடியை ஏந்திய வாறும் தேசிய கீதத்தை பாடியவாறும் தியாகிகளின் பெயர்களை முழங்கியவாறும் விவசாயிகள் வலம் வந்தனர். 1947 ஆகஸ்ட் 15க்குப்பிறகு முதல் முறையாக இந்திய விவசாயிகளால் தலைமை தாங்கப்பட்டு மிகப்பெரும் எண்ணிக்கையிலான இந்திய குடிமக்கள் சுதந்திரத் தினத்தை இப்போதுதான் கொண்டாடி இருக்கிறார்கள் என்று கூறலாம். இந்த அணி வகுப்பு வடக்கில் காஷ்மீர் முதல் தெற்கில் கன்னியாகுமரி வரையிலும்; மேற்கில் குஜராத் முதல் கிழக்கில் திரிபுரா வரையிலும் மிகப்பெரும் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. விவசாயிகளின் இயக்கமாக துவங்கியது இன்றைக்கு அவர்களோடு தொழிலாளர் வர்க்கமும், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட அனைத்துப் பிரிவு மக்களும் ஊக்கத்துடன் பங்கேற்றுள்ள மாபெரும் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. அமைதியான இந்தப் பெரும் போராட்டத்தை சீர்குலைக்க பாஜக அரசாங்கமும், ஆளும் வர்க்கங்களும் முயற்சித்து வருகின்றன. ஆத்திரமூட்டல்களை செய்வதும், பொய்களைப் பரப்புவதும் என கார்ப்பரேட் ஊடகங்களும் சங் பரிவாரக் காவிக் கும்பல்களும் மிகவும் இழிவான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 மாதகாலப் போராட்டத்தில் 150க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிர்கள் பறிபோன போது கள்ள மவுனம் காத்த கார்ப்பரேட் ஊடகங்கள், இப்போது பாஜகவின் சூழ்ச்சியை அரங்கேற்றும் விதத்தில் விவசாயிகள் இயக்கத்தை இழிவுபடுத்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அரசாங்கத்தின் கைக்கூலிகளாக செயல்பட்ட ஒரு குழுவினரை அடையாளம் கண்டு இப்போது தனிமைப்படுத்தி இருக்கிறோம். இவர்களது சூழ்ச்சிகளையும் சதிகளையும் நிராகரித்து இந்திய நாட்டின் மக்கள் விவசாயிகளுக்கு தொடர்ந்து பேராதரவை அளிப்பார்கள் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் உறுதியுடன் நம்புகிறது.அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து… # தீக்கதிர்
3You and 2 others2 Comments3 SharesLikeCommentShare