இன்று சமூகத்தில் உள்ள நிலையை ஆராய்ந்தோமானல்கலை, இலக்கியங்களில் ஏன் ஊடகங்ளிலும் கொலை, திருட்டு, காதல் ஏமாற்றம், கற்பழிப்புப் போன்ற பாலியல் குற்றங்கள், கடத்தல், கலப்படம், ஏமாற்று, சொத்துப் பிணக்குகள், பிற்போக்கான வன்செயல்கள், துன்பியல் செய்திகளை தாராளமாகக் காணலாம். இவையாவும் முதலாளித்துவ சமுதாய அமைப்பிலுள்ள முரண்பாடுகளின் பிரதிபலிப்பேயாகும். முதலாளித்துவத்தின் அமைதியையும் பாதுகாப்பையும் குற்றச் செயல்கள் பயமுறுத்துகின்றன. ஆகவே இக்குற்றங்களையெல்லாம் ஒழிப்பதற்காக முதலாளித்துவம் போலிஸ், சட்டம், சட்டசபை, வக்கீல்கள், நீதிபதிகள், துப்பறியும் நிபுணர்கள், ஆய்வுகூடங்கள், சிறைச்சாலைகள், பாதுகாப்பு காவலர்கள், சிறை அதிகாரிகள், சட்டக்கல்லூரிகள், கற்பிக்கும் பேராசிரியர்கள். இவர்கள் எல்லாம் உற்பத்தியில் ஈடுபடாது பிறர் உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் எத்ற்க்காக முதலாலித்துவத்தை ஆம் அரசை கட்டிக் காக்க. இந்த ஆட்சியின் மாட்சிமையை காக்க குற்றவாளிகளை வதைசெய்யும் கருவிகள், பூட்டுகள், திறப்புகள் கட்டடங்கள், சிறைச்சாலைகள், துப்பாக்கிகள், போலிஸ், சிறைக்காவலர் சீருடைகள், இவ்வாறாக சமூக வளர்ச்சிக்கு பயனற்ற பாதுகாப்புப் பண்டங்களாகும் இவை, . வேலையற்றவர் தொகையை முதலாளித்துவம் இவ்வாறு குறைக்க முயல்கிறது. இவையே முதலாளித்துவ கலாச்சாரமுமாகும்.”சித்தாந்தவாதி கருத்துக்களையும், கவிஞன் கவிதையையும் மதகுரு பிரார்த்தனைகளையும், பேராசிரியர் விரிவுரைகளையும் உற்பத்தி செய்வதுபோல குற்றவாளி குற்றத்தை உற்பத்தி செய்கிறான்” என்று மார்க்ஸ் கூறியுள்ளார். இதைக் கட்டுப்படுத்த, முன்னர் கூறிய பல பிரிவினர் உழைப்பில் ஈடுபடுகின்றனர்.இவ்வாறு முதலாளித்துவத்தில் “குற்றச் செயல்” ஒரு பொருளாகிறது அதனால் பலர் வாழவழிவகை செய்கிறது..ஆம் முதலாளித்துவ கலை, இலக்கியத்திலும், குற்றச் செயல் ஒரு முக்கிய பொருளாகி. “குற்றச் செயல்’ என்ற பொருள் இங்கு நல்ல விலை போகிறது, பத்திரிகைகளில் முக்கிய செய்தியாகி விற்பனையாகிறது, சிறு கதைகள், நாவல்கள், துப்பறியும் கதைகள், மர்மக்கதைகள், கார்டூன் கதைகளான கமிக்ஸ் ஆக இலக்கியச் சந்தையை நிரப்புகிறது. சினிமா, டி. வி. விடியோ படங்களிலும் “குற்றச் செயல்களே? முக்கிய விற்பனைப் பொருளாகுகின்றன; செக்ஸ், வன்செயல் குற்றங்கள் இங்கு முக்கிய பங்குகள் வகிக்கின்றன.குற்றவாளியின் பின்னணி ஒழுக்கம் துன்பியல் உணர்வுகளையும் உற்பத்தி செய்கிறான், இதன் மூலம் மக்களது உணர்வுகளை பிரதிபலிக்கும் படி ஏற்படுத்துகிறன. இவற்றின் மூலம் ஒரு “சேவை’யும் செய்கிறான், சட்டசபை மூலம் குற்றவியல் சட்டங்கள் மட்டு மல்ல கலைத்துறையில் நாவல்கள், துன்பியல் நாடகங்களையும் உற்பத்தி செய்கிறான் என்று மார்க்ஸ் “மூலதனம்” நூலில் பூர்ஷ்வா நாகரிகம் பற்றிக் கூறும்போது குறிப்பிட்டுள்ளார்,உற்பத்தி உறவுகள் பொருள் உற்பத்தியின்போது மக்களிடை நிறு வப்படும் உறவுகள். தனியாகவும் கூட்டாகவும் பொருட்களை உற்பத்தி செய்யலாம். மனித வரலாற்றில் 5 வகையான உற்பத்தி உறவுகள் ஏற்பட்டன.(1) தொன்மைப் பொதுவுடைமை. உற்பத்திக் கருவிகளும் பொருட்களும் சமூகத்திற்குச் சொந்தமாயிருத்தன.(2) அடிமை, (3) நிலவுடைமை, (4) முதலாளித்துவ சமூகங்களில் உற்பத்திக் கருவிகள், சாதனங்கள் உழைப்பவர்களுக்குக் கிடைக்காமையால் முறையே அடிமையாக, நிலம், மூலதனத்திற்கு அடிமையாகின்றனர்.(5) சோஷலிச சமுதாயத்தில் மீண்டும் உற்பத்தி சமூக உடைமை ஆகிறது.இந்த கலாச்சார பாதிப்புகளை அறிந்து சரியான பாதை பொதுவுடைமை சமூகம் மட்டுமே அதனை அடைய ஒன்று படுவோம் இந்த கெடுகெட்ட சமூகத்தை தூக்கி எறிய போராடுவோம்.-சிபி