நான்- ட்ராட்ஸ்கியை பற்றி லெனின் என்ன சொன்னார் தெரியுமா?
ட்ராட்ஸ்கியவாதியின் பதில்- அகிலம் என்ற ஒன்று இல்லாமல் எந்த ஒரு தனி நாட்டிலும் கட்சி கட்ட முடியாது புரட்சி நடத்த முடியாது உங்களுக்கு தெரியுமா?
நான்- ட்ராட்ஸ்கியை பற்றி லெனின் என்ன சொன்னார்?
ட்ராட்ஸ்கியவாதியின் பதில்- ஏப்ரல் தீசஸ் தயாரித்தார், அக்டோபர் புரட்சியை நடத்தினார் உங்களுக்கு தெரியாதா?
நான்- ட்ராட்ஸ்கியை பற்றி லெனின் என்ன சொன்னார் தெரியுமா?
ட்ராட்ஸ்கியவாதியின் பதில்- லெனினுக்கு பின் ட்ராட்ஸ்கியைதான் தலைமை பொறுப்புக்கு நினைத்தார் ஆனால் அராஜகவாதி ஸ்டாலின் தலைமைக்கு வந்து விட்டார்.
நான் – புரியவில்லை உங்களின் ட்ராட்ஸ்கிய புராணம், நான் கேட்ட கேள்வியை விட்டு விட்டு எதை எதையோ பேசுகின்றீர்.
ட்ராட்ஸ்கியவாதியின் பதில்- ஐநாவில் சேர்ந்தமை முதலாளித்துவ ஏகாதிபத்திய கூட்டு சேர்ந்தார்.
நான்- கேட்ட கேள்விகளுக்கு எந்த பதிலுமே காணோம், புதிய கதை எழுதிக் கொண்டுள்ளீர்.
ட்ராட்ஸ்கியவாதியின் பதில்-லெனினே ட்ராட்ஸ்கியை கேட்டுதான் எதையும் செய்வார் தெரியுமா?
நான் – உங்களை பற்றி ஒரு விரிவான பதில் கொடுத்து அம்பலப்படுத்த்னால் மட்டுமே உங்களின் மார்க்சிய விரோத முகமூடிகள கிளித்தெறிய முடியும்.
இனி என்பதிலாக.
சோவியத் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க ட்ராட்ஸ்கி செய்த துரோகங்களை பார்ப்போம்.
அடுத்தடுத்த கட்சி விரோத செயல்களால் ட்ராட்ஸ்கியையும் அவரது ஆதரவாளர்களையும் 1926 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ந்தாவது காங்கிரஸில் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டனர்.
1934ம் ஆண்டு கட்சியின் முன்னணித் தலைவர் கிரோவ்வை படுகொலை செய்யப் படுகிறார், இதிலிருந்தே அவர்களின் அரசியல் தேவை தெரிந்தவையே.
1936 டிசம்பர் 22 ந் தேதி சோவியத் சதி வழக்கில் விசாரணையின் போது ராடக் கூறியது, ட்ராட்ஸ்கி தனக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஸ்டாலின் அரசாங்கத்தை நீக்குவது முடியாத காரியம் ஆகவே ஜெர்மன் மற்றும் ஜப்பான் உதவியுடன் முதலாளித்துவ மனோபாவத்தை பூரணமாக கைவிடாத மக்களையும் கூட்டு பண்ணையில் அதிருப்தி அடைந்துள்ள மக்களையும் மேலும் குலாக்குகளுக்கு கூட்டு பண்ணைகளை விட்டு வெளியேற துடிக்கும் மிராசுதாரர்களையும் பயன்படுத்தி ஜெர்மன் ஜப்பான் உதவியுடன் ஒப்பந்தம் அடிப்படையில் சோவியத் ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் திட்டத்தை வெளிபடுத்தியுள்ளதை வெட்டவெளிச்சமாக்குகிறார்.
அடுத்த சாட்சி பிளாட்கோவுடன் 1935 டிசம்பரில் பேசிய போது ட்ராட்ஸ்கி ஜெர்மன் நாஜிக் கட்சியின் தலைவர் ஒருவருடன் செய்துள்ள ஒப்பந்தம், ஜெர்மனுக்கு சோவியத்தின் சில பகுதிகளை கொடுக்கவும், ஜெர்மன் முதலாளிகள் ரஸ்யாவில் தொழில் தொடங்க சலுகைகள் அளிக்க, யுத்த காலத்தில் ஜெர்மனியின் தேவைகேற்ப்ப சோவியத்துக்கு எதிரான பணிகளை செய்தல் என சோவியத் மக்களுக்கு எதிரான சதிகள் வெளிபடுத்தினர்.
இன்று 4ம் அகிலம் ட்ராட்ஸ்கிசம் என்றால் அவை மார்க்சியமாகுமா? மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கி உயிர் வாழும் பாசிஸத்தை ஆரத் தழுவிய ட்ராட்ஸ்கி மார்க்சியவாதியே அல்ல இவன் எதிர் புரட்சியாளனே….
தோழர் லெனின் மறைவிற்குப் பின் அவரது கருத்துக்களை எதிர்த்தோரை அரசியல் சித்தாந்த ரீதியில் எதிர்ப்பதில் ஸ்டாலின் முன் நின்றார். தனி ஒரு நாட்டில் சோசலிசம் சாத்தியமே என்பதை கட்சிக்குள்ளும் வெளியிலும் பேசி எழுதி அணி திரட்டினார்.
லெனினிசத்தின் அடிப்படைகள் என்னும் நூலை எழுதினார். இது உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு இன்றளவும் உதவுகிறது. லெனினியத்திற்கு மாற்றாக ட்ராட்ஸ்கியிசம் முன் வைக்கப்பட்டதை இந்நூலில் முறியடித்தது.
தொடரும்.