என் சொந்த பிரச்சினை காரண்மாக முகநூலில் தொடர்ந்து எழுத முடியவில்லை தோழர்களே இருந்தும் நேரம் உள்ள போது முக்கிய பதிவுகளை மேலோட்டமாக பார்ப்பதுண்டு ஆனால் விவாதாம் செய்ய முடியாமையால் உள்ளே வரவில்லை அதற்க்கு வருந்துகிறேன்.
இனி இன்றைய பதிவு….
தோழர்களே கொரோனாவின் பெயரில் முதலாளித்துவம் தன்னை மீட்டுக் கொள்ள ஒட்டு மொத்த மக்களையும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது நம் முன் உள்ள பணியாவது நமக்கு அறியுமா?
சர்வதேச பொது நெருக்கடியால் தோன்றிய நெருக்கடியின் சுமையைத் தொழிலாளர்களிடம் சுமத்தி யிருப்பதாலும், இதை மறைக்க உருவாக்கப்பட்டுள்ள மத சாதி வெறி அடக்கு முறை.
ஒடுக்கப்படும் மக்களை ஓர் அணியாக்கி புரட்சிகர அரசியல் போதனையையும், போராட்ட உணர்வையும் ஊட்டும் ஒர் அமைப்பாகக் கட்டியமைத்து, சமுதாய மாற்றத்திற்கான புரட்சிகரப் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் பாட்டாளி வர்க்கம் – விவசாய வர்க்கம் ஆகியவற்றின் கூட்டணியை மையமாக வைத்து அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஓரணியில் திரட்டி புரட்சியை முதன்மையாகக் கொண்ட ஸ்தாபன அரசியற் பணிக்கு தன்னை அர்பணித்து செயல்படல் வேண்டாமோ தோழர்களே?.
பின்னடைவுகளுக்கான தன்மைகளை படிப்பினைகளாக பல்வேறுபட்ட புரட்சி அனுபவங் களின் துணையோடு பெற்று தன்னை ஒரு அமைப்பு ரீதியாக ஒன்றிணைத்து தலைமை சக்தியுடனும் ஏனைய ஜனநாயக சக்திகளுடனும் தன்னை இணைத்துக் கொண்டால் மட்டுமே இந்த அமைப்பு முறையை முற்றாக அகற்றும் புதிய ஜனநாயகப் புரட்சியை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும். இப் புரட்சிப் பணிக்கு முழுமையாக தன்னை அட்படுத்துக் கொள்ளக் கூடாதோ?.
இன்று என்றுமில்லாத மிகச்சாதகமான புரட்சிகர மான புற நிலைமை் நிலவிவருகிறது. ஆனல் அகநிலையில் புரட்சிகர முற்போக்கு சக்திகளின் அமைப்பு ரீதியான பலம் பல்வேறு குழுக்களாக – இயக்கங்களாக ஐக்கியமின்றி – முக்கியமாகத் தோழர்கள் மத்தியிலும் – எதற்காகவோ (வர்க்க சிந்தனை மாறுபட்டதாகவோ, தனிநபர் தலைமை ஆசையோ, விசுவாசமாகவோ, அல்லது உளவாகவோ (?) ஏன் எதுவாகவோ இருக்கலாம்) பிரிந்திருக்கும் வருந்தத்தக்க நிலைமை நீடித்து வருகிறது. எனவே புரட்சிகர முற்போக்கு சக்திகளுக்கு இடையிலான ஐக்கியத்தைப் பலப்படுத்துவதற்காக (இயக்கங்களில் வரட்டுத்தனமான புரட்சிர? வர்க்கசிந்தனை இல்லாதவற்றைத் தவிர்ந்த) கோட்பாடுரீதியான போராட்டத்தின் மூலமும், சரியான கருத்துக்களை ஏற்று, தவறான கருத்துக்களை முறியடிப்பதன் மூலமும், சித்தாந்தப் போராட்டத்தையும் நடத்தி முதன்மையான துணையான முரண்பாடுகளை பகுத்தும் தொகுத்தும் ஆராய்ந்து சுரண்டும் அதி உயர் எதிர்த் தன்மையை உடைத்து அதை முற்றாக நீக்கவும் வேண்டாமோ?
புரட்சிகரமான சூழ்நிலையில் புரட்சிகரமான தத்துவம் இல்லாமல் புரட்சிகரமான கட்சி இல்லை. புரட்சிகரக் கட்சி இல்லாமல் புரட்சி என்பதே இருக்க முடியாது – மாவோ, எனவே நாடு தழுவியதும், வெகுஜன இயல் புள்ளதும், சித்தாந்த ரீதியிலும், அரசியல் ரீதியிலும் உறுதிவாய்ந்த கம்யூனரிச நடைமுறையினைக் கொண்ட “போல்சுவிச’ மயமான கட்சி ஒன்று அமைய ஆமைய வேண்டும் என்பதே நோக்கமாகும்.
அரசியல் அதிகாரத்திற்கான பாட்டாளி வர்க்க உணர்வை சிருஷ்டித்து அதற்கான போராட்ட வடிவங் களை அதன் ஸ்தாபன வடிவில் உருவாக்குதல். இதை நடைமுறைப்படுத்த தத்துவப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து அதில் சரியானவற்றை மக்களிடம் போதிப்பது போன்ற புரட்சிகரகடமைகளை முழு மூச்சுடன் செயல்படுத்த வேண்டாமோ?
மேலும் முதலாளித்துவ பாராளுமன்றக் குட்டையில் நாறும் முதலாளித்துவ கட்சிகள், வலது, இடது திருத்தல்வாத கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் போன்ற கட்சிகளின் வர்க்கத் தன்மையைத் தோலுரித்து அம்பலப்படுத்துவதும், அதன் பின்னுள்ள மக்கள் அணியினரைப் பாட்டாளி வர்க்கத்தின் பாட்டாளிவர்க்க சிந்தனைத் தலைமையிலான விஞ்ஞானபூர்வ ஸ்தாபனத்தின் பின்னால் அணிதிரட்ட வேண்டிய கடமையை யார் ஏற்பது?.
அதே போல புரட்சிகர இயக்கங்களுள்ளும் இன்று வலது, இடது சந்தர்ப்பவாதத் திரிபுகள் தலைதூக்கியுள் ளது. இவற்றை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியம் பற்றித் தோழர்களின் கருத்து என்ன?
தோழர் மாவோ பின்வருமாறு குறிப் பிடுகின்றர்.”ஒரு சரியான அரசியல் ராணுவக் கோட்பாடுகள் என்பது தன்னெழுச்சியாகவோ, அமைதியாகவோ தோன்றாது வளராது; ஆனால், போராட்டம் என்ற போக்கின் ஊடே மட்டும்தான் வளரும் என்பதை – வரலாறு நமக்குக் கூறுகிறது. இந்தக் கோட்பாடுகளும் ஒரு புறத்தில் “இடது” சந்தர்ப்ப வாதத்தையும், மறுபுறத்தில் “வலது’’ சந்தர்ப்ப வாதத்தையும் எதிர்த்துப் போராடித் தோற்க் கடித்தாக வேண்டாமோ?.
புரட்சிக்கும், புரட்சிகர யுத்தத்திற்கும் சேதப்படுத்தும் தீங்கு பயக்கும் போக்குக்களை எதிர்த்துப் போராடாமல், ஒரு சரியான கோட்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதோ யுத்தத்தில் வெற்றிபெறுவதே இயலாததாகும்.”
இத்தகைய திரிபுகள் தமிழகத்தில் உள்ள புரட்சி இயக்கங்களுள்ளும் இருந்து வருகின்றன. குறிப்பாக அழித்தொழிப்புப் போராட்டத்தை மட்டும் ஏற்று ஏனைய போராட்ட வடிவங்களை நிராகரிக்கும் இடது தீவிரவாதமும், பொருளாதாரவாத – பாராளுமன்றவாத – சாக் கடையில் கட்சியை மூழ்கடிக்கும் வலது திரிபும் இருந்து வருவதைச் சித்தாந்தப போராட்டத்தின் மூலம் எதிர்த்து இயங்கியல் பூர்வமான ஒரு புரட்சிகர தத்துவ ரீதியான அமைப்பை உருவாக்க வேண்டியதன்றோ???
புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்பதே இன் றைய கடமை, இக்கடமைக்கு
நமது பங்களிப்பு என்ன தோழர்களே????
புரட்சிகரமான வாய் சொல் என்ற நூலில் உள்ள கருத்துகளை இன்று பகிர்ந்துக் கொள்ள முடியவில்லை ஏதோ தொழிற் நுட்ப்ப கோளாறு நாளை முயற்சிப்பேன் தோழர்களே உங்களின் விமர்சனங்களோடு,,,,தொடரும்…