இந்திய பொருளாதாரம்-2
இந்திய பொருளாதாரம்-2

இந்திய பொருளாதாரம்-2

இன்று இந்தியாவின் மக்கள் தொகை பற்றி புரிந்து கொண்டால் மேலும் பொருளாதாரம் பற்றி பேசுவோம்.

இந்திய பொருளாதாரம்

இந்திய சமூகம் பற்றி அறிவதற்காக நான் இந்திய பொருளாதாரம் என்ற ஒரு தொடரை எழுதத் தொடங்கினேன் அதில் இந்தியாவின் ஆரம்ப நிலை பொருளாதாரம் தொடங்கி பிரிட்டிஷ் இந்தியா மற்றும் இன்றைய இந்தியா எழுத முயற்சிதான் தோழர்கள் தங்களின் கருத்தை பரிமாறினால் சரியான புரிதல் எனக்கு வரும் என்று நினைக்கின்றேன்.

இன்றும் இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் கிராமப்புறத்தில் வாழுகின்றனர்.

இந்திய பொருளாதார வளர்ச்சி என்பது கிராமப்புற தாங்கி இல்லை நாம் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இங்கே நமது எல்லாவிதமான எழுத்துகளும் பேச்சுகளும் நகரம் சார்ந்த பெரும்பான்மையான பாட்டாளி வர்க்கம் மற்றும் இவர்கள் சார்ந்து பேசிய ருகிறோம். உண்மையில் பெரும்பான்மையான கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை நாம் கணக்கில் கொள்ளுவது இல்லை என்று நான் குற்றம் சாட்டுகிறேன்

இவை விக்கிப்பீடியாவின் எடுக்கப்பட்ட செய்திகளே இதை சரி பார்த்துக் கொள்வோம்.

பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872 இல் நடத்தப்பட்டது. 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து, ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது, இது 1951 முதல் நிகழ்ந்தது. இந்தியாவில் கணக்கெடுப்பு உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையரின் அலுவலகத்தால் நடத்தப்படுகிறது, இது ஒரு மத்திய அரசு நடத்தும் மிகப்பெரிய நிர்வாக பணிகளில் ஒன்றாகும்.[3]

சமீபத்திய மக்கள்தொகை புள்ளிவிவரங்கள், இந்தியாவின் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவை அடிப்படையாகக் கொண்டவை. 2001–2011 தசாப்தத்தில், இந்தியாவின் ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.15 சதவீதத்திலிருந்து, 1.76 சதவீதமாகக் குறைந்துள்ளது. தசாப்த கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் தாமன் மற்றும் தியூ ஆகியவை 55.1 சதவீத வேகமான வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன, அடுத்தடுத்து மேகாலயா (27.8 சதவீதம்), அருணாச்சல பிரதேசம் (25.9 சதவீதம்) உள்ளன. நாகாலாந்து மிகக் குறைந்த வளர்ச்சி விகிதத்தை -0.5 சதவீதமாகப் பதிவு செய்தது. இந்தியாவில் 641,000 மக்கள் வசிக்கும் கிராமங்கள் உள்ளன, மொத்த மக்கள் தொகையில் 72.2 சதவீதம் பேர் இந்த கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். அவற்றில் 145,000 கிராமங்களில் 500-999 நபர்களின் மக்கள் தொகை உள்ளது; 130,000 கிராமங்கள் 1000-1999 மக்கள்தொகை அளவையும் 128,000 கிராமங்கள் 200-499 மக்கள்தொகை அளவையும் கொண்டுள்ளன. 10,000 நபர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 3,961 கிராமங்கள் உள்ளன. இந்தியாவின் 27.8 சதவீத நகர்ப்புற மக்கள் 5,100 க்கும் மேற்பட்ட நகரங்களிலும், 380 க்கும் மேற்பட்ட நகர்ப்புற ஒருங்கிணைப்புகளிலும் வாழ்கின்றனர். 1991-2001 தசாப்தத்தில், முக்கிய நகரங்களுக்கு இடம்பெயர்வு நகர்ப்புற மக்கள்தொகையை விரைவாக அதிகரித்தது. கடந்த தசாப்தத்தில் கடைசியாக வசித்தவர்களின் அடிப்படையில், நிகர குடியேறியவர்களின் அடிப்படையில், மகாராஷ்டிராவில் 2.3 மில்லியனுடன் அதிக குடியேற்றம் இருந்தது, அதைத் தொடர்ந்து தேசிய தலைநகர் டெல்லி (1.7 மில்லியன்), குஜராத் (0.68 மில்லியன்) மற்றும் ஹரியானா (0.67 மில்லியன்). உத்தரப்பிரதேசம் (-2.6 மில்லியன்), பீகார் (-1.7 மில்லியன்) ஆகியவை மாநிலங்களுக்கு இடையேயான குடியேற்றத்திற்கான பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்காளம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள், மொத்த இந்திய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி (47.90 சதவீதம்) ஆகும்.

இந்த இடத்தில் கூட்டாக விவசாயம் செய்யப்பட்டது சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அறுவடை செய்யப்பட்ட தானியத்தில் ஒரு பங்கு கொடுக்கப்பட்டது இந்தியா அடிமை படுவதற்கு சற்றுமுன்னர் விளைநிலங்கள் கிராம சமூகத்தில் குழு உறுப்பினர்களிடையே எந்தவிதமான கட்டுப்பாடுகளுமின்றி பிரித்துக் கொடுக்கப்பட்டன ஆனால் அப்போதும்கூட கிராம சமூகத்தின் உடமையாக நிலம் இருந்தது அந்த சமூகத்தின் முழு உறுப்பினர் அந்த சமூகத்தை சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை பகுதியை மட்டுமே உரிமையாக கொண்டிருந்தான் அந்த சமூகத்தின் உறுப்பினர் என்ற முறையில் தான் அவருக்கு சொந்தமாக இருந்தது காலனியாதிக்க முன்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றி ஒரு சிறிய தேடுதல்.
பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் இந்திய நாட்டின் பெரும்பகுதி தெற்கில் சில பிரதேசம் தவிர, மாபெரும் முகலாயப் பேரரசில் அடங்கியிருந்தது. பிரதேச ரீதியாக அனேகமாக ஐரோப்பா முழுமைக்கும் சமமாக இருந்த இந்தப் பரந்த பேரரசின் வளர்ச்சியில் சிறப்பு கூறுகள் இருந்தன . அந்த வளர்ச்சியின்வடிவங்கள் எவ்வளவு அதிகமாக வேறுபட்டிருந்தாலும் இந்தியாவில் பொருளாதார கட்டமைப்பை மொத்தமாக முடிவு செய்வதற்கும் உதவுகிறது.
இந்திய பொருளாதாரத்தில் விவசாயம் ஒரு முக்கியமான துறையாக இருந்தது. பண்டைய காலத்தில் இருந்தே இந்தியாவில் இருந்திருக்கும் அரசு நிலவுடமை , விவசாய உறவுகள் , அந்த சமயத்தில் இருந்து மொத்த பொருளாதார கட்டமைப்பு ஆகியவற்றின் மீதான தீர்மானம் முக்கியமான காரணியாகத் தாக்கம் செலுத்தியது.
எல்லா நிலமும் பெரிய நீர்ப்பாசனக் அமைப்புகளும் அரசின் உடைமையாக இருந்தன . நிதித்துறை அதிகாரிகள் எல்லாம் நிலங்களைப் பற்றிய அடங்கள் என்ற பதிவேடு வைத்திருந்தார்கள். அவற்றுக்காக வசூலிக்கப்பட வேண்டிய வரியை நிர்ணயித்தார்கள். அரசின் பங்கு வழக்கமாக விளைச்சலில் ஆறில் ஒரு பங்குக்கு அதிகமாக இருப்பதில்லை .வரி வசூல் செய்வதற்கு நிலப்பிரபுத்துவ ஜமீன்தார்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது . நாட்டில் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒரு ஜமீன்தார் பொறுப்பாக இருந்தார். வசூலிக்கப்பட்ட வரிகளில் குறிப்பிட்ட சதவீதத்தை அவர்கள் தனக்கு வைத்துக்கொண்டனர் இந்த அமைப்பின் மூலம் நிலபிரபுத்துவ சமூக தன் வருமானத்துக்கு தோற்றம் ஏற்படுத்தி கொண்டது.
நிலம் அரசின் உடைமையாக இருந்தபடியே பெரும்பாலும் ஒன்றாகவே இருந்தது . அரசு நேரடியாக வாரம் அல்லது வரிகள் வடிவத்தில் விவசாயிகளின் கூலி கொடுக்கப்படாத உபரி உழைப்பின் முக்கியமான வடிவமாக அது இருந்தது.
05/03/2022
இந்தியாவின் பொருளாதாரம் பற்றி நான் எழுதிய தொடரானது மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டிய ஒன்று ஏனென்றால் இந்திய நிலை என்பது அன்று ஆசான் மார்க்ச் கூறியது போல் நிலவுடமை சமூகத்திற்கும் முதலாளியை சமூகத்திற்கும் இடைப்பட்ட ஒரு மேலோங்கிய கட்டமே என்பார் அதுபோல் இங்கு உள்ள நில உடைமை என்பது பற்றி ஒரு தெளிவான கண்ணோட்டத்திற்கு நாம் வரவேண்டும்.
நிலம் அரசின் உடைமையாக இருந்தது படிப்படியாக மறைந்து தனிப்பட்ட நிலப்பிரபுத்துவ உடமையாக மாறியது. கிராம சமூகம் தன்னுடைய சுய பூர்த்தியை தந்தை வழி முறையில் இழந்தது . பலமான வெகுஜன இயக்கங்கள் முகலாய பேரரசு சிதறிப் போவதைத் துரிதப்படுத்தின. ஆனால் இந்த நிகழ்வுப் போக்குகள் பூர்த்தி அடையாமல் இருப்பதற்கு ஐரோப்பிய நாடுகள் இந்தியாவில் நடத்திய காலனிய போர்களும் அதன் குறுக்கீடுகளும் இந்த வளர்ச்சிப் போக்கை தடுத்து நிறுத்தியது எனலாம்.
கிராம சமூகத்தின் தனிப்பட்ட உறுப்பினர்களுக்கு இடையிலும், நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலும் குண ரீதியில் புதிய உறவுகள் தோன்றின . இதன் தொடர்பாக இந்தியாவில் நகரங்களில் பொருளாதார வளர்ச்சி மிகவும் அக்கறையை தூண்டுவதாக அமைந்தன.
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட இந்தியாவில் இருந்த நகரங்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் 10 சதவீதம் கூட இல்லை என்பதுதான் உண்மை.
06/03/22
நேற்றைய பதிவின் தொடர்ச்சி
கிராம சமூகத்தின் உச்சியில் இருந்த கிராம தலைவர் போலீஸ் மற்றும் நிதித்துறை பணிகளை நிறைவேற்றினார். அந்த சமூகத்திற்கு என்று தனியாக எழுத்தர், புரோகிதர் ஆசிரியர் காவலாளி ஜோதிடர் மற்றும் இதர்கள் இருந்தனர். இந்தக் கடமைகள் பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாக வந்தன, அவற்றை நிறைவேற்றியவர்கள் அந்த சமூகத்தை ஆட்சி புரிந்த குழுவாக இருந்தனர், அவர்கள் செய்த வேலைக்கு ஊதியம் உணவு தானியங்களாகவோ அல்லது பண்டமாக வழங்கப்பட்டது, சில இடங்களில் அந்த அளவிற்கு வரி இல்லாத நிலங்கள் அல்லது குறைவான வரித்துக் கொண்ட நிலங்கள் தரப்பட்டன.

இந்த சமூகத்தில் இரு பிரிவினர் இருந்தனர் ஒருவர் முழு உரிமையும் கொண்ட உறுப்பினர் மற்றொருவர் குறைந்தபட்ச உரிமைகளை கொண்ட உறுப்பினர்கள் பண்டைய கால இந்தியாவில் உபயோகிக்கப்படாத நிலம் அதிகமாக இருந்தபடியால் கிராம சமூகங்கள் அன்னியர்களை வரவேற்றனர்.
கிராம சமூகத்தின் முழு உறுப்பினர்கள் தங்களுடைய நிலத்தை தங்களுடைய வாரிசுகளிடம் கொடுத்தார்கள் தரிசு நிலம் மேச்சல் நிலம் பசும்புல் நிலம் ஆகியவை கூட்டுமையாக இருந்தன அவற்றுக்கு வரி கிடையாது, விவசாயிகளின் பொருளாதார நடவடிக்கைகளை அரசு கட்டுப்படுத்தவில்லை நிலத்தை உழுது பயிரிட்டு நிலத்திற்கு வாரம் கட்டவேண்டும் என்ற கடமைகளை மட்டுமே அரசு வற்புறுத்தியது. விவசாயம் செய்வதும் அரசுப் பணியாக இருந்தது அதிகாரிகள் பிரதானமான வருமான அளவுகள் என்ற முறையில்தான் கிராம சமூகத்தின் மேல் அக்கறை கொண்டிருந்தனர் எனவே அவற்றைத் தக்க வைப்பதில் அவர்கள் அக்கறை காட்டினார்கள். ஏனென்றால் தன்னுடைய எல்லா உறுப்பினர்களுக்கும் பொறுப்பாக இருந்த கிராம சமூக வரிகள் வசூல் செய்யப்படுவதை உறுதிப்படுத்தியது.

இந்தியாவின் பொருளாதாரம் -3
நேற்றைய பதிவின் தொடர்ச்சி
இந்தியாவில் கைத்தொழில்களுக்கும் விவசாய வேலைக்கும் இடையில் உழைப்புப் பிரிவினை குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் செய்யப்படவில்லை சமூகத்தின் உறுப்பினர்களுக்கு இடையில் செய்யப்பட்டிருந்தது,
சமூகத்தின் உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் முற்றிலும் விவசாய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர், மற்றவர்கள் கைவினைஞர்களாக இருந்தார்கள்,
கைவினைஞர்களுக்கு அறுவடையில் குறிப்பிட்ட ஒரு பகுதி கொடுக்கப்பட்டது, அவர்கள் சமூகத்தின் உறுப்பினர்களுக்கு தங்களுடைய கைத்தொழில் உற்பத்திப் பொருளை கொடுத்தனர், உழைப்பின் இத்தகைய அமைப்பு முறை கிராம சமூகத்தில் பலமான உறவுகளை பேணி வளர்ந்தது,
உழைப்பின் இத்தகைய அமைப்பு முறை கிராம சமூகத்தில் பலமான உறவுகளைப் பேணி வளர்த்தது,
நாட்டின் பொருளாதார பிரிவினையை நிரந்தர படுத்தி நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையில் உழைப்புப் பிரிவினையை தடைசெய்தது உள்நாட்டு சந்தையில் உருவாக்கத்தையும் பண்ட பண உறவுகளின் வளர்ச்சியின் தாமதப்படுத்தியது, இந்தியாவில் நிலவும் ஜாதி முறை சமூகங்களுக்கு உள்ளே குறுகிய ஆனால் நிலையான அக உறவுகளை வளர்ப்பதற்கு முற்பட்டது ஏனென்றால் இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்த விவசாயி அதில் நிரந்தர உறுப்பினராக இருப்பதையும் அவன் செய்ய வேண்டிய வேலை முன்கூட்டி வித்தது, மதத்தை ஆதரவாக கொண்ட ஜாதி முறை இந்தியாவில் கிராம சமூகங்களை சேர்ந்த ஒவ்வொரு நபரும் பொது உழைப்பில் பங்கெடுக்கும் ஸ்தூலமான வடிவங்களை வகுத்துக் கொடுத்து கிராம சமூகங்களில் உழைப்புப் பிரிவினை சட்டமாக்கியது,

இந்தியாவின் பொருளாதாரம் -4

பண்டப் பரிவர்த்தனை முதலில் பக்கத்தில் இருக்கும் சமூகங்களுக்கு இடையிலும் அதற்குப்பிறகு சமூகத்துக்கு உள்ளேயும் தொடங்கி சமூகத்தின் உறுப்பினர்களின் உடைமை மற்றும் வர்க்க ரீதியான வகைப்படுத்தலை
வளர்த்தது , சமூகத்தின் தலைமையில் இருந்த சிலர் பொது நிலத்தை எடுத்துக் கொண்டு அதை தங்களுடைய தனி உடைமையாக மாற்றுவதற்கு தொடங்கினார்கள் ,மக்கள் மத்தியில் இந்த குழுவினர் இடையில் இருந்தே நிலப் பிரபுத்துவ வர்க்கம் தோன்றியது, கிராம சமூகத்தில் ஏற்பட்ட படிநிலை நிகழ்வுப் போக்கு பெரும்பான்மையான உறுப்பினர் நிலைமையும் பாதித்தது, சமூகத்தில் இவர்கள் நிலத்தின் மீதான
தங்களுடைய பரம்பரை உரிமையை வலுப்படுத்திக் கொண்டனர், ஒருபுறம் ஏகபோகமாக நிலத்தை சேர்க்கும் ஒரு கூட்டம் நிலவுடைமையாளர்கள் ஆகவும் இன்னொரு பக்கம் நிலமற்ற அடிமைகளாகவும் சுரண்டலுக்கு வழிவகை செய்தன இவை,

இந்தியாவின் பொருளாதாரம் -5
அன்று இந்தியா என்ற ஒரு நாடு இருக்க வில்லை ஏனென்றால் மத்திய அதிகாரம் என்பது எங்கும் இல்லாத நிலையில் சிறிய சிறிய ராஜ்யங்கள் படிப்படியாக இந்த நிலவுடைமையாளர்களால் ஏற்படுத்தப்பட்டது, இந்த நிகழ்வுப் போக்கு கூட பண்டப் பரிவர்த்தனை வளர்ச்சி புதிய சந்தைகள் மற்றும் பொருளாதார மையங்களில் உருவாக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இருந்தது நிலம் அரசின் உடைமையாக இருந்தது படிப்படியாக மறைந்து தனிப்பட்ட நிலப்பரப்பை உடனே ஏற்பட்டது கிராம சமூகம் தன்னுடைய சுய பூர்த்தி தந்தை வழி முறையையும் இழந்தது,
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட இந்தியாவில் இருந்த நகரங்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் 10 சதவீதம் கூட இல்லை என்பதுதான் உண்மை.

இந்தியாவின் பொருளாதாரம் -6

முன்னர் பதிவின் தொடர்ச்சி
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட இந்தியாவில் இருந்த நகரங்களில் வசித்தவர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் 10% மேல் இருக்காது கிராம சமூகம் விவசாய உழைப்பின் கேந்திரமாக இருந்தது மட்டுமல்லாமல் கைதொழில்களுக்கும் கேந்திரமாக இருந்தது,
மன்னர்களும் அவர்களை சார்ந்த இராணுவம் மற்றும் அவர் பிரிவுகள் மட்டுமே நிரந்தரமாக நகரங்களில் வசித்தனர் இது நகரத்தின் பொருளாதார அமைப்பின் மீது நாட்டின் வளர்ச்சியில் அவற்றின் பாத்திரத்தின் மீது கணிசமான தாக்கத்தைக் கொண்டிருந்தது,
நிலப்பிரபுக்கள் கைவினைஞர்கள் மீது ஏராளமான அதிகாரத்தைக் கொண்டு இருந்தார்கள் ,அவர்களை அனேகமாகப் பண்ணையாட்கள் போலவே நடத்தினார்கள் , கைத்தொழிலுக்கு பிரதானமான அரசர் மற்றும் நிலப்பிரபுக்களின் தேவைகளுக்காகவே தயாரிக்கப்பட்டன ,அவர்கள் இப்பொருட்களின் மீதான உற்பத்தி செலவு பற்றி சிறிதும் கவலைப்படாமல் பெரும்பாலும் விலை கொடுக்காமல் எடுத்துக்கொண்டார்கள் ,
இந்திய நிலப்பிரபுக்களும் சக்கரவர்த்தி தருகின்ற சம்பளத்தை தவிர வேறு வருமானம் இல்லாத படியால் அவர்கள் கைவினைஞர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்த்தகளிடமும் கொள்ளையடித்தார்கள்,
இத்தகைய நிலைமை நகர கைத்தொழில்களில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தாமதப்படுத்தியது இயற்கையே, ஏனென்றால் நகர கைவினைஞர்கள் தமது உற்பத்தியைப் பெருக்குவதில் அக்கறை காட்டவில்லை, இது வெவ்வேறு பிரதேசங்களுக்கு இடையில் வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பாதித்தது ,

இன்னும் அடுத்த பதிவில் தொடரும் நாளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *