கம்யூனிஸ்ட் அகிலத்தின் திசை வழியை புரிந்துக் கொள்வதிலும் அமுல்படுத்துவதிலும் இந்திய கம்யூனிசட் கட்சி சிக்கல்களை எதிர் கொண்டது. தங்களுக்கான திட்டத்தை முன் வைத்து எல்லா ஏகாதிபத்தியய் எதிர்ப்பு சக்திகளையும் தன் தலைமையில் ஒருங்கிணைத்து புதிய ஜனநாயக இந்தியாவை படைக்க தயாரற்ற நிலையில் இருந்தது. ஏனெனில் அது கருத்தியல் அரசியல் ரீதியில் பலவீனமாக இருந்தது. நீண்ட காலம் விஞ்ஞனப் பூர்வமான வேலை திட்டம் இல்லாமலேயெ செயல்பட்டது. “புரட்சிகரமான தத்துவம் (வேலை திட்டம்) இல்லையேல் புரட்சி இல்லை” எனற தோழர் லெனின் புரிதல் கைவிடப்பட்டது. இதன் விளைவு கட்சிக்குள் கோஸ்டிவாதம், பிராந்தியவாதம், பிளவு நடவடிக்கை, சுயநல அடிப்படையில் குழுக்கள் அமைத்தல் போன்ற போக்குகள் கட்சிக்குள் நிலவியது.
இன்னிலையில் (1933ல்) சீன கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிட் கட்சியின் பரிதாப நிலையிலான குழப்பங்கள் பிளவுகளுக்கு முடிவு கட்டி வலுமைமிக்க ஒன்றிணைந்த கட்சியை கட்டும் பணியில் முன்னேறும் படி CPI க்கு வேண்டுகோள் விடுத்தது. ஆனாலும் CPI சில சமயம் இடதுசாரி தந்திரத்தையும் சில சமயம் வலதுசாரி தந்திரத்தையும் பின்ப்ற்றியே வந்துள்ளது. சரியான வழி முன் வைக்கப்படும் பொழுது அது நிராகரிக்கப்பட்டது.
தொடரும்….